நடிகை ரம்பாவின் லேட்டஸ்ட் குடும்ப புகைப்படம் பார்த்து ரசிகர்கள் ஷாக்கில் உள்ளனர்.

ஹிட் நடிகை

1996 ஆம் ஆண்டு வெளியான “உள்ளத்தை அள்ளித்தா” படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை ரம்பா. முதல் படமே இவருக்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்ததால், அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இவரை தேடி வந்தது. சுந்தர புருஷன், சிவசக்தி, அருணாச்சலம், ராசி, விஐபி, நினைத்தேன் வந்தாய், உள்ளிட்ட பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார் நடிகை ரம்பா. தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, பெங்காலி உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்து புகழ்பெற்றவர்.

குழப்பத்தில் ரசிகர்கள்

2010 ஆம் ஆண்டு இந்திரகுமார் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்ட ரம்பாவுக்கு தற்போது மூன்று குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்குப் பிறகு நடிப்புக்கு குட் பை சொல்லி விட்டு குடும்பத்துடன் செட்டில் ஆன ரம்பாவின் லேட்டஸ்ட் புகைப்படமும் அவரது குடும்ப புகைப்படமும் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது. இதனைப் பார்த்த ரசிகர்கள் ரம்பாவிற்கு இவ்வளவு பெரிய மகளா? என்று கேள்வி எழுப்பி வருவதுடன் மீண்டும் நடிக்க வருமாறு அன்பு கட்டளைப்போட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here