மலேசியாவில் பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி படுகாயம் அடைந்தார். பின்னர் சிகிச்சைக்காக கோலாலம்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சென்னைக்கு கொண்டுவரப்பட்டு சிகிச்சைப் பெற்று குணமானார். இந்த நிலையில், பிச்சைக்காரன் 2 படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற விஜய் ஆண்டனியின் மனைவி ஃபாத்திமா பேசுகையில்; “என் படத்தைப் பற்றி பேசுறதுக்கு எனக்கு பெரிசா இஷ்டம் இல்ல. தை பொங்கல் அடுத்த நாள் மாட்டுப்பொங்கல்.. டீ குடிச்சிட்டு இருக்கும் போது மலேசியா படப்பிடிப்பு தளத்துல இருந்து ஒரு போன் கால். விஜயோட அசிஸ்டெண்ட்ட சாருக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சு மேடம். சுயநினைவு இழந்து தண்ணிக்குள்ள மூழ்கிட்டாருன்னு சொன்னார். அதோடு அவன் போன கட் பண்ணிட்டான். எல்லா முடிஞ்சதுன்னு நினைச்சேன். ஆனா பத்திரிகையாளர்கள் எல்லாரும் எனக்கு பாசிட்டிவான கமெண்டுகள் சொல்லி தேத்துனாங்க.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here