வாய்ப்பு கிடைத்தால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்கே வில்லியாக நடிப்பேன் என்று நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் கூறியுள்ளார்.

தெலுங்கில் கவனம்

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியான “போடா போடி” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் வரலக்ஷ்மி சரத்குமார். அதன்பிறகு தாரை தப்பட்டை, சண்டைக்கோழி 2, சர்க்கார், மாரி 2, நீயா 2 போன்ற படங்களில் நடித்தார். சமீபத்தில் இவர் சமந்தாவுடன் இணைந்து நடித்த யசோதா திரைப்படம் மிகவும் பிரபலமானது. திரையரங்குகளில் வெளியான மைக்கேல் திரைப்படத்திலும் வரலக்ஷ்மி சரத்குமார் நடித்துள்ளார். இந்த படம் தற்போது ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

ஆரவ் – வரலக்ஷ்மி

அடுத்தடுத்து பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார் வரலக்ஷ்மி. தமிழில் மட்டும் இல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார் வரலக்ஷ்மி. தயாள் பத்மநாபன் இயக்கத்தில் வரலட்சுமி, ஆரவ், சந்தோஷ் பிரதாப் நடிக்கும் ‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’ திரைப்படம் வரும் 19ம் தேதி ஆஹா OTTயில் வெளியாக உள்ளது.

வில்லியாக நடிப்பேன்

இந்த படம் குறித்து வரலக்ஷ்மி கூறியிருப்பதாவது; “இந்தப் படத்தில் கண்டிப்பாக கதை இருக்கும். கதை கேட்கும்போதே திரில்லராக இருந்தது. படம் ரிலீஸ் ஆகப் போகிறது. ஆரவ்வும் நானும் பயங்கரமாக கூத்தடித்தோம். எங்கள் படத்தில் சர்ச்சை எதுவும் இல்லை. மற்ற படங்களில் எதாவது சர்ச்சை வைத்து விடுகிறார்கள். ஆனால் எங்கள் படத்தில் நல்ல கதை இருக்கிறது. அனைவரும் ஆதரவு கொடுங்கள்” என்றார். தொடர்ந்து பேசிய வரலக்ஷ்மி; “நான் ஒரு நடிகை. எந்த மாதிரி கதாப்பாத்திரமாக இருந்தாலும் நடிப்பேன். வில்லியாக, கேரக்டர் ரோல் என எதுவாக இருந்தாலும் என்னால் அந்த கதாபாத்திரத்திற்கு சிறப்பு சேர்க்க முடியும் என்றால் கண்டிப்பாக நடிப்பேன். வாய்ப்பு கிடைத்தால் ரஜினிக்குகூட வில்லியாக நடிப்பேன்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here