அஜய் தேவகன், மாதவன் இணைந்து நடிக்கும் புதிய படத்தில் நடிகை ஜோதிகா ஒப்பந்தமாகியுள்ளார்.

பாலிவுட்டில் ரீ என்ட்ரி

நடிகர் அஜய் தேவ்கன் மற்றும் மாதவன் இணைந்து நடிக்கும் பாலிவுட் படத்தில் நடிகை ஜோதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். திரில்லர் படமாக தயாராக இருக்கும் இப்படத்தை இயக்குநர் விகாஸ் பால் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே குயின், சூப்பர் 30, குட் பை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இந்த புது படத்தில் அஜய் தேவ்கனுடன் இணைந்து நடிகர் மாதவனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். ஜூன் மாதம் தொடங்க உள்ள இப்படத்தின் சூட்டிங்கை மும்பை, லண்டன், முசோரி உள்ளிட்ட பகுதிகளில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

பாலிவுட்டில் ஜோதிகா

பெயரிடப்படாத இப்படத்தை அஜய் தேவ்கன் ஃபிலிம்ஸ் மற்றும் பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் தயாரிக்க உள்ளன. இந்த திரைப்படத்தில் நடிகை ஜோதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாக இருக்கிறார். நடிகை ஜோதிகா கடைசியாக 1998 ஆம் ஆண்டு வெளியான “டோலி சாஜா கே ரக்னா” என்ற ஹிந்தி படத்தில் அக்ஷய் கண்ணாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்போது அஜய் தேவ்கன், மாதவன் நடிக்கும் படத்தின் மூலம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு ஹிந்தி திரையுலகில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார் ஜோதிகா. இந்த படம் குறித்து கூடுதல் விவரம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here