நடிகர் ரஜினிகாந்துடன் நடிக்கும் வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லை என்று நடிகை சுகன்யா வருத்தத்துடன் தெரிவித்திருகிறார்.

காரணம்

90களில் சினிமாவில் நடிக்க துவங்கிய நடிகை சுகன்யா, சின்ன கவுண்டர், திருமதி பழனிச்சாமி, செந்தமிழ் பாட்டு, சின்ன மாப்பிள்ளை, வால்டர் வெற்றிவேல் உள்ளிட்ட பல ஹிட் படங்களை கொடுத்தார். 90களில் முன்னணி நடிகையாக இருந்து வந்த சுகன்யா, பல டாப் நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவர் தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளிலும் நடித்துள்ளார். டிவி தொடர்களிலும் சுகன்யா நடித்துள்ளார்.

வாய்ப்பு கிடைக்கவில்லை

இந்நிலையில், நடிகை சுகன்யா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்காததற்கான காரணத்தை கூறியுள்ளார். இதுதொடர்பாக சுகன்யா கூறியிருப்பதாவது,”பதினைந்து வருடங்களாக பிசியாக ஓய்வின்றி நடித்த எனக்கு ரஜினியுடன் நடிக்க மட்டும் வாய்ப்பு அமையவில்லை. ஒரு படப்பிடிப்புக்காக விமான நிலையம் சென்ற போது கே.எஸ் ரவிக்குமாரை சந்தித்தேன். அவர் என்னைப் பார்த்ததும் திட்டிவிட்டார். நீங்கள் எதற்காக ரஜினி படத்தில் நடிக்க மாட்டேன் என சொன்னீர்கள் என கேட்டார். அப்போது எனக்கு அவர் கேட்டது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. முத்து திரைப்படத்தில் மீனா கதாபாத்திரத்தில் நடிக்க என்னை அணுகியிருந்தது அப்பொழுது தான் எனக்கே தெரிய வந்தது. அந்த வாய்ப்பு எனக்கு வந்தது எனக்கு தெரியாமலேயே இருந்துள்ளது. இதனால் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பை நான் இழந்துவிட்டேன். அதன்பிறகு அவருடன் நடிக்கும் வாய்ப்பு இதுவரை எனக்கு கிடைக்கவில்லை” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here