விஜய் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் அடுத்த என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

ராதிகா ஈஸ்வரி மோதல்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் பல ரசிகர்களை கொண்டுள்ளது. முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு கோபி சிக்கி தவிக்கிறார். இந்நிலையில் வருகின்ற எபிசோடில் கோபியின் அம்மா ஈஸ்வரி, ராதிகா செய்யும் ஒவ்வொரு வேலையையும் விமர்சனம் செய்து ராதிகாவை டென்ஷன் செய்கிறார். டிவி பார்த்துக் கொண்டிருக்கும் ராதிகாவை டிவி பார்க்கவிடாமல் தடுக்கிறார் ஈஸ்வரி. ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று ராதிகா கேட்டதற்கு, இது என்னுடைய வீடு, நான் மட்டும் தான் டிவி பார்க்க அனுமதி இருக்கு, உனக்கு எந்தவித உரிமையும் இல்லை என்று கூறுகிறார். அதேபோல் சமையல் செய்யப் போனாலும் அங்கே வந்து சமைக்க விடாமல் தடுக்கிறார். அவர் செய்யும் ஒவ்வொரு வேலையிலும் குறுக்கிட்டு ராதிகாவை டென்ஷன் செய்கிறார்.

சவால் விடும் ராதிகா

இந்நிலையில், என் மகன் கண்டிப்பா உன்னை விட்டுட்டு என் கூட வந்துருவான் என்று ஈஸ்வரி ராதிகாவிடம் சொல்ல, நீங்க சொல்றது கனவுல கூட நடக்காது என்று சவால்விடுகிறார் ராதிகா. அது மட்டும் இல்லாமல் இந்த வீட்டின் மருமகன் நீ தான், கோபிக்கும் மனைவி நீதான் என்று சொல்லுகிற காலம் வரும் நான் வர வைப்பேன் என்று சவால் விடுகிறார் ராதிகா. ஆனால் அந்த மாதிரி ஒரு நாளும் நடக்காது என் மருமகள் பாக்யா தான் என்று ஈஸ்வரி சொல்கிறார்.

தவிக்கும் கோபி

இவர்கள் சண்டை ஒரு பக்கம் இருக்க, தன்னுடன் டியூஷனில் படிக்கும் பழனிசாமியின் அம்மாவிற்கு உடம்பு சரியில்லை என்று அவரை நலம் விசாரிக்க பழனிசாமியின் வீட்டிற்கு செல்கிறார் பாக்யா. அப்போது பாக்யா பழனிசாமியிடம் வாசலில் நின்று பேசுவதை கோபி கவனிக்கிறார். அப்போது டென்ஷனான கோபி அமைதியாக இருந்து விடுகிறார். ஆனால் அதற்கு பிறகு பாக்யா போனில் சிரித்து பேசிக் கொண்டு இருக்கும் பொழுது பழனிசாமிடம் தான் பாக்யா போனில் சிரித்து பேசுகிறார் என்று கடுப்பாகிறார் கோபி. விவாகரத்துக்கு பிறகும் இவ சந்தோஷமா தான் இருக்கிறாள். நான் தான் ராதிகாகிட்ட மாட்டிகிட்டு தவிக்கிறேன் என்று புலம்பிக்கொண்டே ரூமுக்கு செல்ல, அங்கு டென்ஷனாக இருக்கும் ராதிகா, கோபியிடம் சண்டை போடுகிறார். இரண்டாவது திருமணம் செய்துகொண்டால் சந்தோஷமாக இருக்கலாம் என்று நினைத்து மாட்டிக்கொண்ட கோபி, தனது சந்தோஷத்தை முழுவதுமாக இழந்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here