‘தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்பட நாயகர்கள் பொம்மன், பெள்ளிக்கு அவர்கள் பெயரிலேயே சிஎஸ்கே ஜெர்சியை தோனி வழங்கியுள்ளார்.

ஆவணப் படம்

‘தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ என்ற ஆவண படம் சமீபத்தில் ஆஸ்கார் விருது வென்றது. யானை கூட்டத்தால் கைவிடப்பட்ட குட்டியானைகளின் வாழ்வியலையும், அவற்றை பராமரிக்கும் முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம் தம்பதியின் வாழ்க்கையையும் தத்ரூபமாக காட்டி இருந்தது. கிருஷ்ணகிரியில் தாயை பிரிந்து 3 மாதங்களே ஆன ரகு என்ற குட்டி யானையும், சத்தியமங்கலம் வனத்தில் தாயை பிரிந்த பொம்மி என்ற குட்டி யானையையும் பராமரிக்கும் பொறுப்பை பொம்மன் – பெள்ளி என்ற பாகன் தம்பதியிடம் வனத்துறை ஒப்படைத்தது.

தோனி பரிசு

இந்த குட்டி யானைகளை வளர்த்த பொம்மன், பெள்ளி தம்பதியை மையமாக வைத்து ‘தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்’ என்ற ஆவண படம் எடுக்கப்பட்டது. இந்த ஆவணப் படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. இந்த நிலையில், ‘தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்’ படத்தை இயக்கிய கார்த்திகி கோன்சாலவஸ் மற்றும் அப்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனியை சந்தித்தனர். அவர்களுக்கு தோனி அவர்களது பெயர் பதித்த சிஎஸ்கே ஜெர்சியை பரிசளித்தார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here