நடிகர் அர்னவ் தனது குழந்தையை நினைத்து வருத்தமாக பேசியது அனைவரையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

குடும்பத்தை பிரித்த ஈகோ

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செவ்வந்தி சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் திவ்யா. இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தையும் உள்ளது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக தனது முதல் கணவரை பிரிந்த திவ்யா, இரண்டாவதாக தன்னுடன் இணைந்து சீரியலில் நடித்த அர்னவ்வை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு தன் கர்ப்பமாக இருக்கும் செய்தியையும் பகிர்ந்து கொண்டார் திவ்யா. அதன் பிறகு அர்னவ், செல்லம்மா சீரியலில் நடிக்கும் அன்ஷிதாவுடன் நெருக்கமாக பழகுவதாகவும், தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு கூறியிருந்தார் திவ்யா. அதன் அடிப்படையில் அர்னவ் மீது வழக்கு பதிவு செய்து சிறையிலும் அடைத்தனர். அதன் பிறகு பெயிலில் அர்னவ் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தூங்கவிடாமல் டார்ச்சர்

பல பிரச்சனைகளுக்கு பிறகும் ஓயாத திவ்யா, அர்னவ் மீது எக்கச்சக்க குற்றச்சாட்டுகளை முன் வைத்து பல வீடியோக்களை வெளியிட்டது மட்டுமல்லாமல் பல பேட்டிகளிலும் கூறி வந்தார். தற்போது இருவரும் தனித்தனியே வாழ்ந்து வரும் நிலையில் சமீபத்தில் திவ்யாவுக்கு பெண் குழந்தையும் பிறந்தது. இந்நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அர்னவ், இணையத்தில் பலரும் அப்பா, அம்மா இருந்தும் குழந்தை அனாதையா வளரனுமா என்று கேட்கிறார்கள். இந்த உலகத்தில் யாரும் அனாதை இல்லை என் மகளுக்கு அப்பாவாக நான் இருக்கிறேன், எனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு இல்லை என்றாலும் கூட, நான் மூட்டை தூக்கியாவது என் மகளை காப்பாத்துவேன். தொடர்ந்து பேசிய அர்னவ், திருமணமான புதில் அனைவரின் குடும்பத்தில் நடக்கும் வழக்கமான சண்டை தான் என்று தான் நான் நினைத்தேன், இதை அவர் பெரிய விஷயமாக்கிவிட்டார். மண்ணள்ளி போட்டு சாபம்விட்டா, குடும்பமே அழிச்சிபோய்டும் என்று எல்லாம் பேசி இருக்கிறார். கிட்டத்தட்ட 42 நாள் என்னை ரூமில் தூங்கவிடாமல் டார்ச்சர் செய்தார். இதற்காக நான் தான் முதலில் போலீஸ் டேஷனுக்கு போய் இருக்கனும் என்று வருத்தமாக பேசியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here