தோனியின் வாழ்க்கை வரலாற்று படமான ‘எம்.எஸ். தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி’ திரைப்படம் ரீ- ரிலீஸ் செய்யப்படும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வசூல் வேட்டை

கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான எம்.எஸ். தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி திரைப்படத்தில் மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் திஷா பதானி, கியாரா அத்வானி, பூமிகா, அனுபம் கெர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். பிரம்மாண்டமாக ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம், ரூ.200 கோடிக்கும் மேல் வசூலித்து வசூல் சாதனை படைத்தது.

மீண்டும் வரும் சுஷாந்த் சிங்

நீரஜ் பாண்டே இயக்கியிருந்த இந்த படத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அவர் மறைந்த பிறகும் இந்த படத்தை ரசிகர்கள் டிரெண்ட் செய்து வந்தனர். இந்நிலையில். எம்.எஸ். தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி திரைப்படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்படுமா என்று எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு தற்போது ஒரு குட் நியூஸ் கிடைத்துள்ளது. இந்த திரைப்படம் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்படும் என படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதன்படி வரும் மே 12ஆம் தேதி திரையரங்குகளில் இத்திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது திரைப்படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த ஐபிஎல் சீசனில் தோனிக்கு கிடைத்துள்ள வரவேற்பின் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த முடிவினால் தோனி ரசிகர்களும், சுஷாந்த் சிங் ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here