ஜீ தமிழ் தொலைக்காட்சியின் பிரபலமான சீரியல்களுள் ஒன்றாக இருக்கும் மீனாட்சி பொண்ணுங்க் தொடர் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
விறுவிறுப்பான எபிசோட்
சமீபத்தில் எபிசோடில் பூஜாவின் தோழிகள் சக்தி மீது சாப்பாட்டைக் கொட்டி அவமானப்படுத்துகிறார்கள். இன்னொரு பக்கம் திருமணத்தை நிறுத்துவதற்காக நீதிமணி காரில் வந்து கொண்டிருக்கிறார். வெற்றியும் பூஜாவும் மணமேடையில் திருமணத்திற்காக தயாராக அமர்ந்து கொண்டிருக்க சமயத்தில் இவர்கள் திருமணம் நடந்ததா? இல்லையா? என்பதை இன்றைய எபிசோடில் பார்க்கலாம்.
அனைத்தும் கனவு
இன்றைய எபிசோடில் வெற்றி பூஜாவின் கழுத்தில் தாலி கட்டுகிறார். தாலி கட்டிய பிறகு பூஜா மேடையை விட்டு இறங்கி வந்து சக்தியை இனி நீ இங்கு இருக்க வேண்டாம் கிளம்பி விடு என அவமானப்படுத்துகிறார்.சரளா பூஜாவிடம் இதுதான் சரியான நேரம் உன்னை அவமானப்படுத்திய சக்தியின் கழுத்தில் இருக்கும் தாலியை கழற்றி விட்டு கல்யாண மண்டபத்தை விட்டு வெளியே துரத்து என்று சொல்ல, பூஜா சக்தியின் தாலியை பிடுங்க வர, சக்தி வேண்டாம் என்று கதறுகிறார். இதைப் பார்த்ததும் செல்வ முருகனுக்கு வலிப்பு வந்து விழுகிறார். அதன் பிறகு தான் இது அனைத்தும் சரண்யா கண்ட கனவு என தெரிகிறது. தற்போது திருமண மேடைக்கு வெற்றி வருகிறார். பூஜா சக்தியிடம் தாலியைக் கொண்டு போய் ஆசீர்வாதம் வாங்கி வரும்படி சொல்கிறார்.
பிரச்சனையாகும் திருமணம்
வெற்றி, சக்தியிடம் உன் ரகசியத்தை இப்பொழுது ஆவது சொல் என்று கேட்க, சக்தி அமைதியாக இருக்கிறார். சரண்யாவும் கேட்க சக்தி அமைதியாகவே இருக்கிறார். சக்தி எதையோ சொல்லி விடுவாரா என்ற பயத்தில் பூஜா ரங்கநாயகியிடம் இவள் திட்டமிட்டு ஏதோ நாடகம் நடத்துகிறார் என்று சொல்ல ரங்கநாயகி கடைசியில் ஏன் இப்படி செய்கிறாய் மீனாட்சி பொண்ணு வார்த்தையை காப்பாற்றுவார் என்று நினைத்தேன். ஏதோ ஒன்றை சொல்வதற்காக நீ தயாராக இருக்கிறாய் , இந்தக் கல்யாணத்தை நிறுத்தி விடாதே என்று சொல்ல சக்தி வேறு வழி இல்லாமல் எதையும் சொல்லாமல் மறைத்துக் கொண்டு தாலியை எடுத்துக்கொண்டு சென்று எல்லோரிடமும் ஆசிர்வாதம் வாங்க செல்கிறார்.