நடிப்பதற்கு யாருடைய அனுமதியும் ஐஸ்வர்யா ராய்க்கு தேவையில்லை என்று அவரின் கணவரும். நடிக்ருமான அபிஷேக் பச்சன் கூறியுள்ளார்.

டபுள் ரோல்

மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் பொன்னின் செல்வன் 2 திரைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக முதல் பாகத்தில் ஐஸ்வர்யாராயின் காட்சிகள் குறைவாக இடம் பெற்றது. ஆனால் இரண்டாம் பாகத்தில் ஐஸ்வர்யா ராய், விக்ரம் இணைந்து நடிக்கும் காட்சிகள் கூஸ்பம்சாகவே அமைந்துள்ளது. ஊமை ராணி மற்றும் நந்தினி என இரண்டு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஐஸ்வர்யாராயின் காட்சிகள் ஒட்டுமொத்தமாக ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

அனுமதி தேவையில்லை

ஐஸ்வர்யா ராயின் பெர்ஃபார்மன்ஸ் பாராட்டும் வகையில் சோசியல் மீடியாவில் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார் அபிஷேக் பச்சன். அதற்கு ரசிகர் ஒருவர் ஐஸ்வர்யா ராயை தொடர்ந்து பல படங்களில் நடிக்க அனுமதிக்க வேண்டும், அதுமட்டும் இல்லாமல் மகளை பார்த்துக் கொள்ளும் பொறுப்பை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் கமெண்ட் செய்திருந்தார். இந்த கமெண்ட்டை பார்த்த அபிஷேக், “ஐஸ்வர்யா ராய் திரைப்படங்களில் நடிப்பதற்கு யாரிடமும் அனுமதி பெற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. வாழ்க்கையில் மிகவும் நேசிக்கும் ஒரு விஷயத்தை செய்வதற்கு அவர் யாரிடமும் அனுமதி கேட்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் விருப்பப்பட்டால் தொடர்ந்து பல படங்களில் நடிக்கலாம்” என்று அந்த ரசிகருக்கு அபிஷேக் பச்சன் பதில் அளித்துள்ளார். இவரது பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here