விறுவிறுப்பாக நடந்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஜனார்த்தனனால் தொடர்ந்து அவமானப்படுத்தப்படுகிறார் ஜீவா.

பிரிந்த குடும்பம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல தொடர்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அண்ணன் தம்பிகளின் பாசத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில், சில நாட்களுக்குப் முன்பு அண்ணன் தம்பிகளுக்குள் பிரச்சனை ஏற்பட்டு கண்ணனும், ஜீவாவும் வீட்டை விட்டு பிரிகின்றனர். இந்நிலையில் ஜீவா தனது மாமனார் வீட்டில் வசித்து வருகிறார். சமீபத்தில் முல்லையின் வளைகாப்பு நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்கின்றனர். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அனைவரும் ஒன்று கூடுவார்கள் என்று தனம் எதிர்பார்ப்பில் இருந்தார். ஆனால் நிகழ்ச்சி முடிந்தவுடன் அவரவர் கிளம்பிச் சென்றுவிட்டனர்.

சொத்தை கொடுக்கும் மாமனார்

இந்நிலையில் தற்போது ஜீவா மாமனார் வீட்டிலேயே வசித்து வருகிறார். ஜீவாவின் சுய கௌரவம் பாதிக்கப்படும் என்பதால் மீனாவும், ஜீவாவும் தனியாக செல்ல வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் ஜனார்த்தனன் சொத்து பத்திரத்தை ஜீவாவின் கையில் கொடுத்து “எனக்கு அப்புறம் மொத்த சொத்தையும் நீங்க தான் பாத்துக்கணும்” என்று முழு பொறுப்பையும் அவரிடத்தில் ஒப்படைக்கிறார். என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த ஜீவா பொறுப்பாக மாமனாரின் வியாபாரத்தை பார்த்துக் கொள்கிறார்.

அவமானப்படுத்தப்படும் ஜீவா

இந்நிலையில், கடைக்கு பொருட்களை இறக்கும் சில நபர்களிடம் தனிப்பட்ட முடிவை எடுக்கிறார் ஜீவா. இதனால் டென்ஷனான ஜனார்த்தனன் எந்த முடிவு எடுக்கிற மாதிரி இருந்தாலும் ஒருமுறை என்கிட்ட கேட்டுட்டு முடிவெடுங்க என்று கூறுகிறார். இதைக் கேட்ட ஜீவா மிகவும் வருத்தப்படுகிறார். மேலும் பொறுப்பை ஒப்படைத்த பிறகு என் மேல் நம்பிக்கை இல்லாமல் உங்க அப்பா பேசுவது எனக்கு வருத்தமாக இருக்கிறது என்று மீனாவிடம் கூறுகிறார். இதனால் ஜனார்த்தனன் மேல் மன வருத்தத்தில் இருக்கும் ஜீவா, அடுத்த கட்ட முடிவு எடுப்பாரா? இல்லை இப்படியே மாமனார் வீட்டிலேயே தங்கி விடுவாரா? என்று வரப்போகும் எபிசோட்டில் தான் தெரிய வரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here