ஜீ தமிழில் பரபரப்பாக ஒளிபரப்பாகும் சீதா ராமன் தொடர் இன்றைய எபிசோட்.

சமாளிக்கும் மகா

ஜீ தமிழில் 7.30 மணிக்கு பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர் சீதா ராமன். இந்த தொடரில் இன்றைய எபிசோடில் சீதா ராமை கோவிலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது லாயர், ஆடிட்டர் வீட்டிற்கு வருகிறார்கள். அப்போது மகாலட்சுமி ராம் சீக்கிரமாக வீட்டுக்கு வந்து விடுவார் என்று சொல்லி சமாளிக்கிறார். அதே சமயத்தில் கோவிலில் சீதா ராமிடம் உங்க சித்தி நல்லா இருக்கணும்னா நீங்க 100 முறை அங்கபிரதக்ஷணம் செய்ய வேண்டும் என்று சொல்லி அவரை செய்ய வைக்கிறார். மகாலட்சுமி ராமுக்கு போன் செய்யும் பொழுதும் சீதா அதனை கட் செய்து விடுகிறார்.

கையெழுத்து போட்ட ராம்

இதைத்தொடர்ந்து கோவிலில் பிரசாதம் கொடுக்கின்றனர், சீதா அதனை வாங்க போன சமயத்தில் சுபாஷ் மற்றும் சேதுபதி வந்து ராமை காரில் அழைத்துச் சென்று விடுகின்றனர். இதனால் சீதா என்ன செய்வது என்று புரியாமல் வீட்டுக்கு வந்து சேர்கிறார். வீட்டிற்கு வந்த ராமை டாக்குமெண்டில் கையெழுத்து போடச் சொல்லி மகாலட்சுமி கூறுகிறார். அதனை தடுக்கிறார் சீதா. ஆனால் சீதாவின் பேச்சை கேட்காமல் டாக்குமெண்டில் கையெழுத்து போட்டு விடுகிறார் ராம்.

சவால் விடும் மகா

வேலைக்கார பெண், லாயர் மற்றும் ஆடிட்டருக்கு காபி கொண்டு வருகிறார். நானே கொண்டு போய் காபி கொடுக்கிறேன் என்று சீதா வாங்கிக் கொண்டு வருகிறார். இதனை பார்த்த அர்ச்சனா “நீ எதுக்கு இங்க வந்த? உள்ள போ மெண்டல்” என கூறுகிறார். இதனால் டென்ஷன் ஆகும் சீதா, மெண்டல் என்ன பண்ணும் தெரியுமா? என ராம் மற்றும் மீரா கையெழுத்து போட்ட டாக்குமெண்ட்களை கிழித்து போடுகிறார். இதனால் டென்ஷனான மகா “கூடிய சீக்கிரம் உன்னை இந்த வீட்டில் இருந்து வெளியே துரத்துறேன் பாரு” என சவால் விடுகிறார். “உங்களால என்ன ஒன்னும் பண்ண முடியாது” என சீதாவும் கூறுகிறார். சீதா ராமன் தொடரில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here