நடிகை சமந்தாவிற்கு சந்தீப் என்ற ரசிகர் ஒருவர் தனது வீட்டிலேயே கோயில் கட்டி வருகிறார்.

பாலிவுட்டில் சமந்தா

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. சமீப காலமாகவே இவர் நடித்த சிலபடங்களுக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. தற்போது பாலிவுட் பக்கம் திரும்பி உள்ள சமந்தா ‘சிட்டாடல்’ வெப் தொடரின் ஹிந்தி ரீமேக்கில் நடித்து வருகிறார். இந்த வெப்தொடரின் ஃப்ரீ ஷோ விழாவில் கவர்ச்சிகரமாக கலந்து கொண்டார் சமந்தா. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ஷாகுந்தலம் திரைப்படம் படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து சமந்தாவிற்கு தமிழ், தெலுங்கில் மார்க்கெட் குறைய தொடங்கியதாகவும் அதனால் தான் இவர் பாலிவுட் பக்கம் திரும்பியதாகவும் சினிமா வட்டாரத்துக்குள் பேச்சு நிலவுகின்றது.

சமந்தாவிற்கு கோவில்

தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் சமந்தா. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, நடிகை சமந்தாவுக்கு ஆந்திர மாநிலம் குண்டூரில் சந்தீப் என்ற ரசிகர் ஒருவர் கோயில் கட்டி வருகிறார். சமந்தாவைப் போல் சிலையும் வடித்து வைத்துள்ளார். வீட்டின் மொட்டை மாடியிலேயே கோவில் போல் கூரை அமைத்து, தீவிரமாக கோவில் காட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இதுபோல் ஏற்கனவே பல நடிகைகளுக்கு ரசிகர்கள் கோவில் கட்டி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here