சன் டிவியில் விரைவில் தென்றல் 2 தொடர் தொடங்கவுள்ளதை இயக்குநர் உறுதி செய்துள்ளார்.

நல்ல வரவேற்பு

சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த தொடரில் ஸ்ருதி ராஜ் மற்றும் தீபக் தினகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இவர்களுடன் ஹேமலதா, ஸ்ரீவித்யா, ஆடம்ஸ், ஐயப்பன், சாந்தி வில்லியம்ஸ், சாதனா, ஐஸ்வர்யா, நீலிமா ராணி, ஆர்த்தி, ஷியாம் விஸ்வநாதன், ராஜா, சுந்தர், சுஜாதா பஞ்சு, எஸ்.ராஜசேகர், சுஜிதா, எஸ்.என்.லட்சுமி, ஆண்டனி ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்தை இயக்கும் பணியில் இயக்குநர் குமரன் உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

புதிய தொடர்

இந்நிலையில், இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் இயக்குநர் எஸ்.குமரன் தனது சமூக வலைதளபக்கத்தில்,” இதுவரை எனது பயணத்தில் அங்கம் வகித்த அனைவருக்கும் மிக்க நன்றி. உங்கள் அனைவரின் அன்பையும், ஆதரவையும் வேண்டுகிறேன். தென்றல் 2 நிச்சயமாக உங்களை மகிழ்விக்கும். விரைவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும்” என பதிவிட்டுள்ளார். இந்த புதிய தொடரை கான ரசிகர்கள் ஆவலாக இருப்பதுடன், இதில் யார் யார் நடிப்பார்கள் என்று இப்பொழுதே பேச தொடங்கி விட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here