தயாரிப்பாளர் சிட்டிபாபுவிற்கும், சமந்தாவிற்கும் இடையே இருக்கும் கருத்து வேறுபாடு சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

பாலிவுட்டில் சமந்தா

ஹாலிவுட் இயக்குநர்களான ரூஸ்ஸோ பிரதர்ஸின் புதிய வெப் தொடரான சிட்டாடல் தொடரில் பிரியங்கா சோப்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஏப்ரல் 28 ஆம் தேதி அமேசான் ப்ரைம் OTT தளத்தில் இத்தொடர் வெளியாகிறது. தொடரின் ஹிந்தி ரீமேக்கில் சமந்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமந்தா கடைசியாக ஷாகுந்தலம் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த படம் தமிழ் புத்தாண்டு அன்று திரையரங்குகளில் வெளியானது. ஆனால் எதிர்பார்த்த அளவு அந்த படம் வெற்றிபெறவில்லை. ரூ.40 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட அந்த படம் வந்ததே தெரியாமல் போனது. சரித்திர படம் என்பதால் கண்டிப்பாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த சமந்தாவுக்கும், அவரது ரசிகர்களுக்கும் இந்த படம் ஏமாற்றமாகவே அமைந்தது.

மானம் போய்விடும்

இந்நிலையில் தெலுங்கு திரையுலக தயாரிப்பாளர் சிட்டிபாபு சமீபத்தில் அளித்த பேட்டியில், ஷாகுந்தலம் படத்தின் தோல்வியால் சமந்தாவின் சினிமா வாழ்க்கை ஒட்டுமொத்தமாக முடிந்துவிட்டது, அவர் தனக்கு நோய் உள்ளதாக கூறியது எல்லாம் நடிப்பு தான். அப்படி அனுதாபத்துடன் பேசிக்கொண்டு தன்னுடைய படங்களுக்கு விளம்பரம் தேடிக் கொள்கிறார்” என்று கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக நடிகை சமந்தா, காதில் முடி அதிகம் வளர்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார். இதனால் கடுப்பான தயாரிப்பாளர் சிட்டிபாபு, “நான் வாயை திறந்தால் சமந்தாவின் மானமே போய்விடும் என்று கோபத்துடன் பதில் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “என் காதுகளில் இருக்கும் முடியை பற்றி பேசாமல், என் வார்த்தையில் இருக்கும் நேர்மையைப் பற்றி பேசினால் நன்றாக இருக்கும். நான் மட்டும் வாயை திறந்தால் சமந்தாவின் மானமே போய்விடும்” என்று கூறியுள்ளார். இந்த பேச்சு சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here