நடிகை ஸ்ருதி ஹாசன் முருகக்கடவுளின் கையில் வைத்திருக்கும் வேல்லை பச்சை குத்தி கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

வெற்றிக்காக வெயிட்டிங்

ஹேராம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன், தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்து வருகிறார். தமிழில் ஏழாம் அறிவு, பூஜை, புலி, வேதாளம், லாபம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை என்பதால், தற்போது தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் ஸ்ருதிஹாசன். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான வீர சிம்ஹா ரெட்டி, வால்டர் வீரய்யா உள்ளிட்ட படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது சலார் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள ஸ்ருதிஹாசன், இந்த படத்தின் வெற்றிக்காக காத்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில், போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. கே.ஜி.எஃப். புகழ் பிரசாந்த் நீல் சலார் இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரபாஸ், பிரித்விராஜ், ஸ்ருதிஹாசன், ஜெகபதிபாபு உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்துள்ளனர். சுமார் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்தப்படம் உருவாகி உள்ளது.

கடவுள் பக்தி

நடிகை ஸ்ருதிஹாசன் எப்பொழுதும் ஆன்மீகத்தில் தனக்கு ஈடுபாடு அதிகம் என்று கூறி வருவார். அது மட்டுமில்லாமல் தனக்கு இஷ்டக் கடவுள் முருகன் என்றும் பல பேட்டிகளில் கூறியுள்ளார். அதனை நிரூபிக்கும் வகையில், தற்போது முருகனின் கையில் வைத்திருக்கும் வேலை பச்சை குத்தி கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது. இதுதொடர்பாக தனது இன்ஸ்டா ஸ்டோரியில் நடிகை ஸ்ருதிஹாசன் பதிவிட்டிருப்பதாவது; “எனக்கு ஆன்மீகத்தில் எப்போதும் ஈடுபாடு உண்டு. முருகப்பெருமானின் வேலுக்கு, என் இதயத்தில் எப்பொழுதும் தனி இடம் இருக்கிறது. வேல் பச்சை குத்தி எனது பக்தியை வெளிப்படுத்த விரும்புகிறேன். பச்சை குத்துவது எனக்கு மிகவும் பிடித்த வழக்கமான ஒன்று. அது மட்டுமில்லாமல் ஆன்மீகத்தில் தொடர்புடைய ஏதாவது ஒரு விஷயத்தை பச்சை குத்த வேண்டும் என்று கருதினேன். அதனால் தான் வேலை பச்சை குத்திக் கொண்டேன்” என்று கூறியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here