நான் செய்யும் எல்லாவற்றிலும் தவறுகளை கண்டு பிடிப்பதற்கென்றே ஒரு கூட்டம் உள்ளது என்று வருத்தத்துடன் கூறியுள்ளார் நடிகை பிரியங்கா சோப்ரா.

ஹாலிவுட்டில் செட்டில்

சமீப காலமாகவே நடிகை பிரியங்கா சோப்ராவை சுற்றி பல சர்ச்சைகள் நிலவி வந்து கொண்டே இருக்கின்றது. பாலிவுட்டில் இருந்து விலகிய நடிகை பிரியங்கா சோப்ரா, ஹாலிவுட்டில் செட்டில் ஆகிவிட்டார். தற்போது இவர் நடிப்பில் சிட்டாடல் வெப் தொடர் வெளிவர தயாராக உள்ளது. இதன் பிரிமியர் ஷோ லண்டனில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த வெப் தொடரின் ஹிந்தி ரீமேக்கில் நடிகை சமந்தா நடித்து வருகிறார். இந்நிலையில் எதை செய்தாலும் தவறு கண்டுபிடிக்கிறார்கள் என்று நடிகை பிரியங்கா சோப்ரா வருத்தமாக கூறியுள்ளார்.

கவலையில் பிரியங்கா

கடந்த சில மாதங்களுக்கு முன் பிரியங்கா சோப்ரா ஆங்கில ஊடகத்திற்கு பேட்டி கொடுக்கும் பொழுது ‘RRR’ திரைப்படம் தமிழ் படம் என்று தவறுதலாக கூறியிருந்தார். இதனால் நெட்டிசன்கள் வாயில் சிக்கினார் பிரியங்கா சோப்ரா. இந்நிலையில் சமீபத்தில் சிட்டாடல் வெப் தொடரின் ப்ரோமோஷனில் தீவிரமாக ஈடுபட்டு வரும் பிரியங்காவிடன்,வரை சுற்றி வரும் சர்ச்சைகள் பற்றி கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது பதில் அளித்த பிரியங்கா சோப்ரா, “நான் செய்யும் எல்லாவற்றிலும் தவறுகளை கண்டுபிடித்து வருகிறார்கள். அதனை அவர்கள் மிகவும் ரசிக்கிறார்கள். நான் அதிக சுதந்திர மனப்பான்மையோடு இருந்தேன். ஆனால் இப்போது எச்சரிக்கையுடன் இருக்கிறேன். வாழ்வில் எவ்வளவு உயரத்துக்கு செல்கிறீர்களோ, அதற்கு அதிகமாக நீங்கள் விழுவதற்கான காரணத்தை சிலர் தேடிக்கொண்டே இருக்கின்றனர். எனக்கு என் குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களின் அன்பும், ஆதரவும் அதிகமாக உள்ளது. நான் அதில் மட்டுமே அதிக கவனம் செலுத்த விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here