முதலாம் ஆண்டு திருமண நாள் பரிசாக ரூ.10 லட்சம் மதிப்பிலான ஹேண்ட் பேக்கை வாங்கிக் கொடுத்துள்ளார் நடிகர் ரன்பீர் கபூர்.

பிரபல நட்சத்திர ஜோடி

பாலிவுட் நட்சத்திர ஜோடியாக இருப்பவர்கள் ரன்பீர் கபூர் – ஆலியா பட். கடந்த வெள்ளிக்கிழமை அன்று இவர்களது முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடினர். அவர்களது திருமண நாளன்று பந்தராவில் புதிதாக கட்டப்பட்டு கொண்டிருக்கும் அவர்களது புதிய வீட்டிற்கு ஜோடியாக சென்றனர். அப்போது ஆலியா பட் கையில் வைத்திருந்த பிங்க் நிற ஹேண்ட் பேக்கை திருமண நாள் பரிசாக ரன்பீர் கபூர் அவரது மனைவிக்கு பரிசளித்ததாக கூறுகின்றனர்.

திருமண நாள் பரிசு

சமீபத்தில் ரன்பீர் கபூர் விமான நிலையத்திலிருந்து வரும் பொழுது கையில் பரிசு பொருள் ஒன்றை எடுத்து வந்ததாகவும், அந்த பரிசு பொருளில் பிங்க் நிற ஹேண்ட் பேக் தான் இருந்ததாகவும் கூறுகின்றனர். ஹேண்ட் பேக்கை சுற்றியும் தங்கம் வைத்து டிசைன் செய்யப்பட்டது போல தெரிகிறது. அந்த பேக்கின் மதிப்பு $12,250 டாலர் என்றும் இந்திய மதிப்பின்படி ரூ.10 லட்சம் என சொல்லப்படுகிறது. இது சம்மந்தப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here