இப்போதைக்கு திருமணம் பற்றி பேச வேண்டாம் என்று நடிகை திரிஷா கூறியுள்ளார்.

தீவிர ப்ரோமோஷன்

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் டாப் நடிகையாக இருப்பவர் திரிஷா. கடந்த சில வருடங்களாக சில தோல்வி படங்களை கொடுத்த பிறகு, 96 படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தின் மூலம் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையே திரும்பி பார்க்க வைத்தார். இப்படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியடைந்ததை தொடர்ந்து, தற்போது இரண்டாம் பாகத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றது.

ரசிகர்கள் ஆரவாரம்

வரும் 28ஆம் தேதி வெளியாக இருக்கும் PS 2 திரைப்படத்தின் ப்ரோமோஷனில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சனிக்கிழமை அன்று அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் பொன்னின் செல்வன் 2 ஆந்தம் பாடல் வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து சமீபத்தில் கோவையிலும் பொன்னின் செல்வன் 2 ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியை ரசிகர்கள் ஆரவாரம் செய்து கொண்டாடினார்கள்.

இப்போ வேண்டாம்

2002 ஆம் ஆண்டு மௌனம் பேசியதே படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான திரிஷா, இன்று வரை சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாகவே இருந்து வருகிறார். திரிஷாவின் ரசிகர்கள் மட்டுமில்லாமல் சினிமா ரசிகர்களுக்கே இருக்கும் கேள்வி என்னவென்றால், இவரை விட வயதில் சிறிய நடிகைகள் பலரும் திருமணம் செய்துகொண்ட நிலையில், இன்னும் ஏன் த்ரிஷா திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது தான். அதேபோல் சமீபத்தில் பொன்னியின் செல்வன் 2 பட ப்ரோமோஷனில், உங்களுக்கு எப்பொழுது திருமணம் என்று கேள்வி முன் வைக்கப்பட்டது. அதற்கு திரிஷா கூறிய பதில் சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. அவர் கூறியிருப்பதாவது; “ரசிகர்களுக்காக நல்ல படங்களில் நடித்து வருகிறேன். தற்போதுக்கு திருமணம் பற்றி பேச வேண்டாமே” என பதில் அளித்தார். 40 வயதாகும் திரிஷா இன்னும் திருமணம் குறித்து யோசிக்கவே இல்லையா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here