குழந்தைகளின் கல்வி உரிமைக்காக பேசிய பென்னாலூர்பேட்டை பயிற்சி எஸ்.ஐ. பரமசிவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

விழிப்புணர்வு

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த பென்னலூர்பேட்டை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் பரமசிவம். மதுரை பூர்வீகமாக கொண்ட இவருக்கு, கல்வி மீது மிகுந்த ஆர்வம் உள்ளதால், தான் பணிபுரியும் இடங்களில் எல்லாம் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளை அணுகி கல்வியின் அவசியம் பற்றி வலியுறுத்தி வருகிறார். அந்த வகையில், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் உதவி ஆய்வாளரின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.

பாராட்டு

இந்த வீடியோவை கண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எஸ்.ஐ. பரமசிவத்தின் செயலுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் முதலமைச்சர் வெளியிட்டுள்ள பதிவில்; “காலைச் செய்தித்தாளில் மகிழ்ச்சிதரும் செய்தியைப் படித்தேன்! பகிர்கிறேன். குற்றங்களைத் தடுப்பது மட்டுமே காவல்துறையின் பணி அல்ல; நல்ல சமூகத்தை வடிவமைப்பதிலும் அவர்களது பங்கு உண்டு. குழந்தைகளின் கல்வி உரிமைக்காகப் பேசிய பென்னாலூர்பேட்டை பயிற்சி S.I பரமசிவம் அவர்களை வாழ்த்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here