லண்டன் விமான நிலையத்தில் கைக்குழந்தையுடன் தவித்த பெண் ஒருவருக்கு நடிகர் அஜித்குமார் உதவி செய்துள்ளார்.

வைரலாகும் புகைப்படங்கள்

தமிழில் முன்னணி நடிகராக இருக்கக்கூடியவர் நடிகர் அஜித். துணிவு படத்தை தொடர்ந்து தற்போது ஏகே 62 படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். சமீப காலமாகவே அஜித்தின் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் டிரெண்டாகி வருகின்றது. குடும்பத்துடன் டூர் சென்ற புகைப்படங்களும், ஷாலினியுடன் இருக்கும் ரொமான்டிக் புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வெளியாகி செம வைரலாக பரவிய நிலையில், தற்போது கைக்குழந்தையுடன் இருந்த ஒரு பெண்ணுக்கு உதவி செய்துள்ள புகைப்படமும் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

உதவிய அஜித்

கிளாஸ்கோவில் இருந்து சென்னைக்கு 10 மாத கைக்குழந்தையுடன் ஒரு பெண் தனியாக பயணம் செய்துள்ளார். லண்டன் ஹீத்ரா விமான நிலையத்தில் குழந்தையுடன் அனைத்து பொருட்களையும் அந்தப் பெண் தூக்கி வருவதை பார்த்த நடிகர் அஜித்குமார், அந்தப் பெண்ணிடமிருந்து சில பொருட்களை வாங்கி அவரே தூக்கிச் சென்றுள்ளார். இதுகுறித்து அந்தப் பெண்ணின் கணவர் தனது டுவிட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். மேலும் நடிகர் அஜித்குமாருக்கு நன்றியும் கூறியுள்ளார். அஜித்துடன் அந்த பெண் எடுத்துக்கொண்ட புகைப்படமும், கணவர் பதிவிட்ட பதிவும் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அஜித்தின் இந்த செயலுக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here