கேடி படத்தில் நடித்து வரும் நடிகர் சஞ்சய் தத் தன்னை பற்றி பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

ஷூட்டிங்கில் விபத்து

ஹிந்தியில் முன்னணி நடிகராக இருக்கக்கூடிய சஞ்சய் தத் ‘கேஜிஎஃப் 2’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடம் பிரபலமான சஞ்சய் தத், தற்போது தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட சஞ்சய் தத்துடன் விஜய் பேசும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களும், வீடியோக்களும் வைரலாக பரவியது. இதைதொடர்ந்து தற்போது கன்னடத்தில் உருவாகி வரும் ‘கேடி’ என்ற படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் சஞ்சய் தத். இந்த படத்தின் படப்பிடிப்பு பெங்களூரில் உள்ள மகடி ரோடு அருகே நடந்து வருகிறது.

நலமுடன் இருக்கிறேன்

சமீபத்தில் கேடி படத்தின் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டது. இந்த சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்ட போது சஞ்சய் தத்துக்கு பலத்த காயம் ஏற்பட்டதாகவும், உடனே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்ததாகவும், அதன்பிறகு மும்பை திரும்பினார் என்றும் தகவல்கள் வெளியானது. இந்த செய்திகள் அனைத்தும் சஞ்சய் தத்துக்கு தெரிய வர, அதற்கான விளக்கத்தை அவர் கொடுத்துள்ளார். இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகர் சஞ்சய் தத் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது; “படப்பிடிப்பின் போது எனக்கு காயம் ஏற்பட்டதாக தகவல்கள் பரவி வருகின்றது. ஆனால் அந்த தகவல்கள் உண்மை இல்லை. நான் நலமுடன் தான் இருக்கிறேன். தற்போது கேடி படத்தின் சூட்டிங்கில் பங்கு பெற்று வருகிறேன். அது மட்டும் இல்லாமல் என்னுடைய காட்சிகள் மிகவும் பாதுகாப்பாக தான் படமாக்கப்பட்டு வருகிறது” என்று விளக்கம் அளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here