சண்டையினால் பிரிந்து இருந்த நட்சத்திரா மற்றும் ஸ்ரீநிதி மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளார்.

யாரடி நீ மோகினி பிரபலம்

ஜீ தமிழில் யாரடி நீ மோகினி, வள்ளி திருமணம் ஆகிய தொடர்களில் நடித்திருந்தவர் நட்சத்திரா விஸ்வநாதன். யாரடி நீ மோகினி தொடரில் நட்சத்திரா விஸ்வநாதன் நடித்திருந்த கதாபாத்திரம் ரசிகர்களிடையே இவரை மிகவும் பிரபலப்படுத்தியது. சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய நட்சத்திராவுக்கு கடந்த ஜூலை மாதம் திருமணம் நடந்தது . விஷ்வா என்பவரை திருமணம் செய்துகொண்ட நட்சத்திரா, சமீபத்தில் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை பதிவிட்டு இருந்தார். இதனைதொடர்ந்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

மீண்டும் சேர்ந்தனர்

யாரடி நீ மோகினி சீரியல் மூலம் தோழிகளாக மாறியவர்கள் நடிகை நட்சத்திரா மற்றும் ஸ்ரீநிதி. இந்த தொடரில் இருவரும் இணைந்து நடித்திருந்ததால் இவர்களின் நட்பு அதிகரித்தது நிலையில், நட்சத்திராவின் திருமணத்தின் போது இருவரும் சண்டையிட்டு பிரிந்தனர். நடிகை ஸ்ரீநிதி சிம்புவை காதலிப்பதாகவும் அவர் வீட்டின் முன் போராட்டம் செய்து பல சர்ச்சைகளையும், பரபரப்பையும் ஏற்படுத்தினார். தற்போது நட்சத்திராவுடன் பணியாற்றிய பல நடிகைகள் அனைவரும் ஒன்று கூடியுள்ளனர். அவை அனைத்தையும் நடிகை நட்சத்திரா தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். ஸ்ரீநிதியோடு சண்டை போட்டு சேர்வது போல ரீல்ஸ்சும் செய்து வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் சண்டையில் பிரிந்த நீங்கள் மறுபடியும் ஒன்று கூடி விட்டீர்களா? என்று கமெண்ட்கள் பதிவு செய்து வருகின்றனர். எப்பொழுதும் இதேபோல் ஒற்றுமையாக இருங்கள் என்றும் ரசிகர்கள் இவர்களுக்கு அட்வைஸ் கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here