ஏப்ரல் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள PS 2 திரைப்படம் 4DX வடிவத்திலும் வெளியிடப்படும் என்று தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

பிரம்மாண்ட வெற்றி

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, பிரகாஷ்ராஜ், ரஹ்மான், பார்த்திபன் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வெளியான திரைப்படம் தான் PS 1. மெட்ராஸ் டாக்கீஸ் லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான இப்படம் சூப்பர்ஹிட் படமாக அமைந்தது. கல்கியின் நாவலை தழுவி இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டு இருந்தது.

வித்தியாசமான அனுபவம்

PS 1 கிட்டத்தட்ட ரூ. 500 கோடிகளுக்கு மேல் இந்த படம் வசூலித்து சாதனை படைத்தது. அதனால் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கூட்டி உள்ளது. வரும் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள PS 2 திரைப்படம் 4DX வடிவத்திலும் வெளியிடப்படும் என்று தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். 4DX என்பது தியேட்டர் இருக்கைகளில் மாற்றும் மற்றும் மிகவும் அட்வான்ஸ் தொழில்நுட்பமாகும். இது வளைந்து கொடுக்கக்கூடிய இருக்கைகள், காற்று, மழை, ஸ்ட்ரோப் விளக்குகள், செயற்கை பனி மற்றும் வாசனைகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளுடன் சேர்ந்து திரைப்படங்களை பார்க்கலாம். ஆனால் இந்த வடிவத்தில் படங்களைப் பார்க்க இந்தியாவில் மிக குறைந்த திரையரங்குகளை உள்ளன. தமிழ்நாட்டில் எந்த தியேட்டர்களிலும் 4DX வசதி இல்லை. இந்த 4DX வசதியில் படம் பார்க்க தமிழக மக்கள் பெங்களூரு, கொச்சி, திருவனந்தபுரம் அல்லது ஹைதராபாத்துக்கு செல்ல வேண்டும். PS 2 திரைப்படம் ஏப்ரல் 28ஆம் தேதி திரைக்கு வர உள்ளதால், ஏப்ரல் 21ஆம் தேதி PS -1 படத்தை மீண்டும் திரையிட பட குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here