பிரபல தயாரிப்பாளர் சந்தீப் சர்கார் தனக்கு பாலியல் மிரட்டல் விடுப்பதாக இந்தி நடிகை ஸ்வஸ்திகா முகர்ஜி போலீசில் புகார் அளித்துள்ளார்.

பரபரப்பு புகார்

2001ம் ஆண்டு வங்க மொழியில் வெளியான ‘ஹேமந்தர் பகி’ என்ற திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகனமானவர் ஸ்வஸ்திகா முகர்ஜி. ‘காலா’ என்ற படம் மூலம் இந்தி திரையுலகுக்கு வந்தார். இந்தியில் நிறைய படங்களில் நடித்திருக்கும் இவர், தற்போது ‘ஷிபுர்’ என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இணை தயாரிப்பாளர் சந்தீப் சர்கார் தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக ஸ்வஸ்திகா முகர்ஜி கொல்கத்தாவில் உள்ள கோல்ப் கிரீன் போலீசில் புகார் அளித்துள்ளார்.

தலைமறைவு

அவர் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது; தயாரிப்பாளர் சந்தீப் சர்கார் எனக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார். தனது ஆசைக்கு உடன்படாவிட்டால் மார்பிங் செய்த உனது நிர்வாண புகைப்படங்களை ஆபாச இணையதளங்களில் வெளியிடுவேன் என மிரட்டுகிறார்” என்று குறிப்பிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், சந்தீப் சர்கார் தலைமறைவாகி விட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here