நடிகர் விஜய் தேவரகொண்டா- நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் ஒரே வீட்டில் வசிப்பதாக கிசுகிசுக்கள் வெளிவந்துள்ளது.

சூப்பர் ஹிட் படங்கள்

சுல்தான் படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. சுல்தான் படத்தில் கார்த்தியுடன் இணைந்து நடித்தார். ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு அந்த படம் வரவேற்பை பெறவில்லை. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று பல மொழிகளில் வெளியான புஷ்பா படத்தின் மூலம் தனது நடிப்பை நிரூபித்தார் ராஷ்மிகா. சமீபத்தில் விஜய்யுடன் இணைந்து வாரிசு படத்தில் நடித்தார். ஆனால் அந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது.

காதல் கிசுகிசு

நடிகை ராஷ்மிகா மந்தனா பற்றி அடிக்கடி பல காதல் கிசுகிசுக்கள் வெளிவருகின்றன. ஏற்கனவே விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்த சமயத்தில் அவருடன் காதலில் இருப்பதாக செய்திகள் வெளியாகின. அதன்பிறகு இளம் கிரிக்கெட் வீரரான சுப்மன் கீலை காதலிப்பதாக தகவல் வந்தது. சில தினங்களுக்கு முன் மும்பை விமான நிலையத்தில் தெலுங்கு நடிகரான பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸும், ராஷ்மிகாவும் ஜோடியாக வந்தார்கள் இதனை பார்த்தவுடன் இருவரும் காதலிப்பதாக மீடியாக்களும், நெட்டிசன்களும் கொளுத்தி போட்டனர்.

தொடரும் சர்ச்சை

இந்நிலையில் தற்போது மீண்டும் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து ராஷ்மிகா பற்றி கிசுகிசுக்கள் நிலவி வருகிறது. நடிகை ராஷ்மிகா தனது பிறந்தநாளின் போது வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில் அவர் கையில் அணிந்திருந்த மோதிரம் விஜய் தேவரகொண்டாவின் மோதிரம் என்றும், இருவரும் ஒரே வீட்டில் தங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. இதனை கேள்விப்பட்ட ராஷ்மிகா “ரொம்ப யோசிக்காதீங்க” என்று கூறியுள்ளார். இவரது இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here