பின்னணி பாடகர் விஜய் ஏசுதாஸ் வீட்டில் நகை காணாமல் போனது பற்றி இதுவரை வீட்டில் இருந்த 9 ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதில் 2 பேர் பீகார் மற்றும் நேபாளம் சென்றது அம்பலமாகியுள்ளது.

கொள்ளை

சென்னை அபிராமபுரம் 3-வது தெருவில் பிரபல பின்னணி பாடகர் விஜய் யேசுதாஸ் தனது மனைவி தர்ஷனாவுடன் வசித்து வருகிறார். இவரது வீட்டு லாக்கரிலிருந்த ரூ.60 லட்சம் மதிப்புள்ள தங்கம், வைர நகைகள் திருடு போனது. இதுகுறித்து தர்ஷனா அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12ம் தேதி லாக்கரில் நகைகள் வைக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் கடைசியில் லாக்கரை திறந்து பார்த்தபோது, நகைகள் மாயமாகி இருப்பது தெரியவந்துள்ளது.

அம்பலம்

இதனை தொடர்ந்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். வீட்டிலிருந்த 9 ஊழியர்களிடம் இதுவரை போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் வீட்டில் பணி செய்த நேபாளத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், பீகாரை சேர்ந்த ஆண் ஒருவர் என 2 பேர் சொந்த ஊருக்கு சென்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பீகார், நேபாளத்திற்கு சென்ற ஊழியர்களை சென்னைக்கு வரவழைத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here