பாக்கியலட்சுமி தொடரில் ஜெனி கதாபாத்திரத்தில் நடிக்கும் திவ்யா கணேஷ் தனது வாழ்வில் நடந்த கசப்பான சம்பவம் குறித்து பேசியுள்ளார்.

சப்போர்டிங் ரோல்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் ஜெனி என்ற கதாபாத்திரத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் திவ்யா கணேஷ். பாக்கியலட்சுமியின் மூத்த மகனான செழியன் என்பவரின் மனைவி கதாபாத்திரமே இந்த ஜெனி. மகனே அம்மாவான பாக்கியலட்சுமிக்கு சப்போர்ட் செய்யாத போது, மருமகளாக இருந்து பாக்கியலட்சுமிக்கு சப்போர்ட் செய்து அவரை ஊக்குவித்து வருகிறார் ஜெனி. பாக்கியலட்சுமியின் ஒவ்வொரு முயற்சியிலும் ஜெனியின் ஒத்துழைப்பு அதிகம் இருக்கும் அளவிற்கு இவரது கேரக்டர் இருந்து வருகின்றது. மேலும் அந்த தொடரில் அவருடைய டிரெஸ்ஸிங் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.

பளார் விட்ட ஜெனி

பாசிட்டிவாக இருக்கக்கூடிய இவரது கேரக்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அதனால் சோசியல் வீடியோக்களில் இவருக்கு ரசிகர்கள் அதிகம். இந்நிலையில் தனது வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் குறித்து திவ்யா கணேஷ் வெளிப்படையாக கூறியுள்ளார். அதாவது ஒருமுறை ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் பயணம் செய்தபோது, திவ்யாவை ஒரு நபர் அத்துமீறி சீண்டியுள்ளார். இதனால் கோபமடைந்த திவ்யா, விமானத்தில் அங்கேயே அந்த நபரின் கன்னத்தில் பளார் என அறைந்துள்ளார். இந்த சம்பவத்தை சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மேலும் பெண்கள் இதுபோன்ற சம்பவங்களை சகித்துக் கொண்டு இல்லாமல் அப்பொழுதே அவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என அட்வைஸும் செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது இவர் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here