ராதிகா சரத்குமார் நடிப்பில் விஜய் டிவியில் புதிய தொடர் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது.

முன்னணி நடிகை

70களில் நடிக்க துவங்கிய நடிகை ராதிகா சரத்குமார், தமிழ் படங்களில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என்று பல மொழிகளிலும் நடித்து வருகின்றார். சில படங்களில் டப்பிங் ஆர்டிஸ்ட்டாகவும் பணியாற்றிய நடிகை ராதிகா சரத்குமார், 1991 ஆம் ஆண்டு தூர்தர்ஷனில் ஒளிபரப்பான “பெண்” என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் நடிக்க துவங்கினார். நாலாவது முடிச்சு, விடுதலை தொடர்களை தொடர்ந்து, சன் டிவியில் ஒளிபரப்பான சித்தி, அண்ணாமலை உள்ளிட்ட தொடர்களின் மூலம் சின்னத்திரையிலும் பேமஸானார்.

புதிய தொடர்

வாணி ராணி, சித்தி 2, திருமகள் உள்ளிட்ட பல தொடர்களிலும் நடித்தார் நடிகை ராதிகா சரத்குமார். தற்போது சந்திரமுகி 2 படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதன் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகியது. தற்போது கிழக்கு வாசல் எனும் புதிய தொடரில் நடித்து வருகிறார் ராதிகா. இந்த சீரியலில் திருமதி செல்வம் புகழ் சஞ்சீவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். எஸ்.ஏ. சந்திரசேகர் இத்தொடரை இயக்கி வருகிறார். மேலும் இவர் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். இந்த தொடர் விஜய் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here