நட்சத்திர ஜோடியான இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகியோர் குலதெய்வ கோயிலுக்கு செல்லும்போது திருச்சி விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

முடியப்போகும் ஜவான்

தமிழில் முன்னணி நடிகையாக இருக்கக்கூடிய நடிகை நயன்தாரா, தற்போது ஹிந்தியில் ஷாருக்கானுடன் இணைந்து “ஜவான்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படத்தை அட்லீ இயக்குகிறார். அனிருத் இசை அமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் 90 சதவிகிதம் முடிந்துள்ளது. இன்னும் இரண்டு பாடல்கள் மட்டுமே படமாக்கப்பட வேண்டும் என்று கூறுகின்றனர். ஜவான் படத்திற்காக இதுவரை மும்பையிலேயே தங்கி இருந்த நடிகை நயன்தாரா, சமீபத்தில் விருது வழங்கும் விழாவில் பங்கேற்று தனது மகன்களின் இரு பெயர்களையும் வெளிப்படையாக சொல்லி ட்ரெண்டிங் லிஸ்டில் சேர்ந்தார்.

ஜோடியாக சாமி தரிசனம்

நடிகை நயன்தாரா தற்போது தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து குலதெய்வ கோயிலுக்கு செல்வதற்காக கும்பகோணத்திற்கு வந்துள்ளார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த விக்னேஷ் சிவன் நயன்தாரா ஜோடி, கார் மூலம் கும்பகோணம் புறப்பட்டனர். விமான நிலையத்தில் இருவரும் வந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகின்றது. திருமணத்திற்கு பிறகும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நடிகை நயன்தாரா, அடுத்தடுத்து நடிக்க இயக்குநர்களிடம் கதை கேட்டு வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here