ஜூனியர் என்டிஆர் நடிக்கும் NTR30 படத்தில் வில்லனாக நடிக்க சைப் அலி கானுடன் பேச்சு வார்த்தை நடந்ததாக கூறப்படுகின்றது.

பாலிவுட் நடிகை

ஜூனியர் என்டிஆர் நடிக்கும் அடுத்த படத்திற்கு வில்லனாக நடிக்க சைப் அலி கான் உடன் பேச்சுவார்த்தை நடந்ததாகவும், அவர் மறுத்து கோபமாக பேசியதாகவும் கூறப்படுகிறது. என்டிஆர் 30 திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாக உள்ளது. பெயரிடப்படாத இந்த படத்தில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் ஹீரோயினாக நடிக்கிறார். இதனை போஸ்டர் மூலம் வெளியிட்டு அறிவித்திருந்தனர் பட குழுவினர்.

கடுப்பான சைப் அலி கான்

ஓம்ராவத் இயக்கிய “தானாஜி” என்ற ஹிந்தி படத்தில் சைப் அலி கான் வில்லனாக நடித்திருந்தார். அப்படத்தில் அஜய் தேவ்கன் ஹீரோவாக நடித்திருந்தார். அப்போதிருந்த பழக்கத்தால் ஓம்ராவத் இயக்கும் அடுத்த படமான “ஆதி புருஷ்” படத்தில் பிரபாஸுக்கு வில்லனாகவும் நடித்து வருகிறார் சைப் அலிகான். இதனைதொடர்ந்து பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் என்டிஆர் 30 திரைப்படத்தில் வில்லனாக நடிக்க சைப் அலி கானை கேட்டுள்ளனர். இதனால் கடுப்பான சைப் அலி கான், “நான் என்ன வில்லன் நடிக்கிறாரா? நான் ஒரு ஹீரோ என்பதை மறக்காதீர்கள். இதுபோல் நெகட்டிவ் கேரக்டருக்கு என்னை தேடி வராதீர்கள்” என்று கடுமையாக பேசியதாக தகவல் வெளிவந்துள்ளது. அதனால் வேறொரு வில்லன் நடிகரை நடிக்க வைக்க பட குழுவில திட்டமிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here