தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலால் மக்கள் அச்சமடைய வேண்டாம் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

அச்சம் வேண்டாம்

இந்தியாவில் கொரோனா பரவலின் வேகம் தற்போது அதிகரித்துள்ளது. தமிழகத்திலும் கடந்த சில நாட்களாக கொரோனா அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் முகக்கவசம் கட்டாயம் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் அதிகரித்துவரும் கொரோனா பரவல் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

பாதிப்பு குறைவு

திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது; “கொரோனா பரவல் அதிக பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும், மக்கள் அலட்சியமாக இருக்கக்கூடாது. மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ளது. தமிழ்நாட்டில் 90% மக்களுக்கு எதிர்ப்பு சக்தி சிறப்பாக உள்ளது. முதலமைச்சரின் துரித நடவடிக்கையின் காரணமாக 11 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 7000 படுக்கை வசதி அமைக்கப்பட்டுள்ளது” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here