சீதா ராமன் தொடரில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று ஆவலுடன் எதிர்பார்க்கும் அளவிற்கு பரபரப்பாக சென்று கொண்டு இருக்கிறது.

கடத்த திட்டம்

ஜீ தமிழில் சமீபத்தில் தொடங்கப்பட்ட சீதாராமன் சீரியல் பல திருப்பங்களுடன் பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இத்தொடரின் இன்றைய எபிசோடில் ராஜசேகர், மதுமிதாவை திட்டுவதற்காக ரூமுக்குள் வருகிறார். ஆனால் அங்கு மதுமிதா இல்லாததை பார்த்து ஷாக் ஆகிறார். இன்னொரு பக்கம் துரை மகாலட்சுமியின் திட்டத்தை எப்படியாவது ராஜசேகர் குடும்பத்திடம் சொல்ல வேண்டும் என முயற்சிக்கிறார். இப்படி இருக்கும் சூழ்நிலையில் துரை, மதுமிதா அல்லது ராம் இருவரில் யாராவது ஒருவரை கடத்திவிட்டால் மகாலட்சுமியின் திட்டம் நிறைவேறாமல் போய்விடும் என திட்டம் போடுகிறார். உடனே நேராக சீதாவிடம் சென்று இரண்டு விரலை காட்டி இந்த இரண்டு விரலில் ஏதாவது ஒன்றை தொடச் சொல்லி கேட்கிறார். எந்த விஷயமும் தெரியாமல் ஒரு விரலை தொடுகிறார் சீதா. இதனால் மதுமிதாவை கடத்திவிடலாம் என திட்டம் போடுகிறார்.

ஒரே நேரத்தில் கடத்தல்

அதன்பிறகு சீதாவும், மதுமிதாவும் பேசிக் கொண்டிருக்கும்போது திட்டம் போட்டு மதுவைத்தவை தனியாக வரவழைத்து ரூமுக்குள் அடைத்து வைக்கிறார். இன்னொரு பக்கம் ராமுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து அவரையும் கடத்தி விடுகின்றனர். இருவரும் ஒரே நேரத்தில் காணவில்லை என்பதனால் வீட்டைவிட்டு ஓடிப் போய்விட்டதாக மகாலட்சுமி குடும்பத்தினர் நினைக்கின்றனர். இப்படி பல்வேறு திருப்பங்களுடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீதாராமன் தொடரில், அடுத்தது எது நடக்கப் போகிறது என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here