பாண்டவர் இல்லம் தொடரின் மூலம் பிரபலமான நடிகை அணு தனது மகனுக்கு பெயர் வைத்துள்ளதை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு உள்ளார்.

5 வருடத்திற்கு பிறகு குழந்தை

பாண்டவர் இல்லம் தொடரின் மூலம் பிரபலமானவர் நடிகை அனு. இந்த தொடரில் ரோஷினி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் அனு. நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து வந்த அனுவுக்கு, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. நிஜத்தில் நடிகை அனு கர்ப்பமாக இருந்ததால் இத்தொடரைவிட்டு பாதியிலேயே விலகினார். அனுவிற்கும், விக்னேஷ் என்பவருக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், ஐந்து ஆண்டுகளுக்குப் பின் கர்ப்பமாக இருப்பதை சமூக வலைதளத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு தெரிவித்திருந்தனர். அது மட்டும் இல்லாமல் வளைகாப்பு புகைப்படங்களையும் ஷேர் செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

பெயர் சூட்டிய அனு

சமீபத்தில் இவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. மருத்துவமனையில் பிரசவ வலியில் இருக்கும் பொழுது கணவர் தன்னை அரவணைத்ததை குட்டி வீடியோவாக எடுத்து பதிவிட்டு இருந்தார் அனு. தற்போது தனது மகனுக்கு பெயர் வைத்துள்ளதை சமூக வலைதளம் மூல கூறியுள்ளார். இத்தம்பதியினர் குழந்தைக்கு அழகான தமிழில் “வாண் வியான்” என்று பெயர் சுட்டியுள்ளனர். குழந்தையின் புகைப்படத்தை பதிவிட்டு, “வானம் போல் வந்தாய் என் வாழ்க்கையில், மலரை போல் விரிந்தாய் என் கையில், மழை போல் நனைந்தாய் என் நெஞ்சில், என் வாண் வியான்” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த இவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here