நடிகர் அரவிந்த்சாமி ரோஜா படத்தில் இடம் பெற்றிருந்த பாடல் குறித்து ஸ்வாரஸ்ய சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.

ஆரம்பத்தில் இருந்தே ஹிட்

தளபதி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான அரவிந்த்சாமி, முதல் படத்திலேயே தனது அபார நடிப்பால் ரசிகர்கள் மனதில் கொள்ளை கொண்டார். அதன்பிறகு இவர் நடித்த “ரோஜா” திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். மணிரத்னம் இயக்கிய இந்த திரைப்படத்தில் அரவிந்த் சாமிக்கு ஜோடியாக மதுபாலா நடித்திருந்தார். கே.பாலச்சந்தர் தயாரித்திருந்த இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். ரோஜா திரைப்படம் மட்டும் இல்லாமல், அதில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர்ஹிட் ஆனது. அது மட்டும் இல்லாமல் இந்த ஒரு படத்தின் மூலம் பல பெண் ரசிகைகளை தனதாக்கி கொண்டார் அரவிந்த்சாமி. பிரபல நடிகரான டெல்லி குமாரின் மகனான அரவிந்த் சுவாமி, ரோஜா திரைப்படம் குறித்து இத்தனை ஆண்டுகள் கழித்து சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

பயந்து ஓடினேன்

நடிகர் டெல்லி குமார் மெட்டிஒலி, அண்ணாமலை, மலர்கள் உள்ளிட்ட டிவி தொடர்களிலும், டும் டும் டும், கன்னத்தில் முத்தமிட்டால், பாய்ஸ் உள்ளிட்ட படங்களிம் மூலம் மிகவும் பிரபலமானவர். இவரது மகனான அரவிந்த் சாமி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த ரோஜா திரைப்படம் வெளியான சமயத்தில் நடந்த சுவாரசியமான தகவல் ஒன்றை இத்தனை ஆண்டுகள் கழித்து பகிர்ந்து உள்ளார். இந்த படத்தில் இடம்பெற்றிருந்த “புது வெள்ளை மழை” பாடல் மிகவும் ரொமான்டிக்கான பாடலாக இன்றும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது. தனது அப்பாவுடன் தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்த அரவிந்த்சாமி, அந்த பாடல் வரும் பொழுது அவருடன் பார்க்க பயந்து பாத்ரூம் சென்று வருவதாக கூறிவிட்டு வெளியே சென்றுவிட்டதாக கூறியுள்ளார். இந்த தகவல் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. ரோஜா படத்திற்கு பிறகு பல ஹிட் படங்களை அரவிந்த்சாமி கொடுத்திருந்தாலும் ரோஜா படத்திற்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றனர். இத்தனை ஆண்டுகளுக்கு கழித்து இவர் பகிர்ந்த இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் உட்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here