இயக்குநர் ஹரி மற்றும் ப்ரீதா ஹரி தொடங்கியுள்ள புதிய ஸ்டூடியோ நடிகர் சூர்யா திறந்து வைத்தார்.

ஹரி – சூர்யா காம்போ

திரைத்துறை பணிகளான ரெக்கார்டிங், டப்பிங், எடிட்டிங் பணிகளை நவீன வசதிகளுடன் திறம்பட செய்யும் புதிய குட்லக் ஸ்டூடியோவை இயக்குநர் ஹரி மற்றும் ப்ரீதா ஹரி துவங்கியுள்ளனர். அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் கலந்துகொண்ட இவ்விழாவில், நடிகர் சூர்யா பங்கேற்று ஸ்டுடியோவை திறந்து வைத்தார். டைரக்டர் ஹரி தந்தை கோபாலகிருஷ்ணன், நடிகர் விஜயகுமார், ரியா ஹரி, ஶ்ரீதேவி விஜயகுமார் ஆகியோர் குத்து விளக்கேற்றினார்கள். புதிய ஸ்டூடியோவை தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் எம்.அப்பாவு தலைமையில் நடிகர் சூர்யா ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.

பிரபலங்கள் வாழ்த்து

இந்த நிகழ்ச்சியில் டைரக்டர் எஸ்.பி.முத்துராமன், ஆர்.வி.உதயகுமார், செந்தில்நாதன், தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூரசுந்தர பாண்டியன், எஸ்.ஆர்.பிரபு, மோகன் நடராஜன், எம்.எஸ். முருகராஜ், கார்த்திக் சந்தானம், எடிட்டர் ஆண்டனி, ஒளிப்பதிவாளர் கோபிநாத், சுகுமார், ஶ்ரீதர், நடிகர் தலைவாசல் விஜய், நடிகை நிக்கி கல்ராணி, இயக்குநர் கார்த்திக் ராஜா, அலெக்ஸ் பாண்டியன், நடிகர் சௌந்தர்ராஜா, நடிகர் ராஜேஷ், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், ஓ.ஏ.கே.சுந்தர், ஶ்ரீதேவி விஜயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டு, டைரக்டர் ஹரி, ப்ரிதா ஹரி ஆகியோருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

பாரம்பரியமான புகழ்

முன்னணி நடிகர் விஜயகுமாருக்கு சொந்தமான குட்லக் ப்ரிவியுவ் திரையரங்கம் 40 வருட பாரம்பரியம் கொண்டது. குட்லக் ப்ரிவியுவ் திரையரங்கில் தமிழ்நாட்டின் முதல்வர்களாக இருந்த எம் ஜி ஆர், திரு கருணாநிதி,ஜெயலலிதா, ஜானகி ஆகியோருடன் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் வரை திரைப்படம் பார்த்து ரசித்த பெருமை இந்த திரையரங்கிற்கு உள்ளது. தற்போது குட்லக் ஸ்டூடியோஸை முன்னணி இயக்குநர் ஹரி மற்றும் ப்ரீதா ஹரி துவக்கியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here