கூட்டணி குறித்து பாஜகவின் தேசிய தலைவர்களே முடிவு செய்வார்கள் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மரியாதை

அதிமுகவின் பொதுச்செயலாளராக பதவியேற்ற எடப்பாடி பழனிசாமி நேற்று சேலம் சென்றார். அதனைதொடர்ந்து இன்று காலை சேலம் அண்ணா பூங்காவில் உள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரது சிலைகளுக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கூட்டணி

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்; “அதிமுக – பாஜக கூட்டணி பற்றி முடிவு செய்ய வேண்டியவர்கள் மத்தியில் உள்ள தேசிய தலைவர்களே தவிர, மாநிலத்தில் உள்ளவர்கள் அல்ல. அதிமுக கூட்டணியில் பாஜக உள்ளதாக டெல்லி தலைவர்களே சொல்லிவிட்டனர். அதிமுகவில் இருந்து விலகிய ஒரு சிலரை தவிர அனைவரும் மீண்டும் இணைய வேண்டும் என்பதே விருப்பம்” என எடப்பாடி பழனிசாமி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here