நடிகை நயன்தாரா தனது குழந்தைகளின் முழு பெயரை முதல் முறையாக கூறியுள்ளார்.

பிரம்மாண்ட திருமணம்

முன்னணி நடிகையாக இருக்கக்கூடிய நடிகை நயன்தாரா, ‘ஐயா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நயன்தாரா, அடுத்தடுத்து பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார். ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து லேடிஸ் சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். நானும் ரவுடி தான் என்ற படத்தின் மூலம் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு அறிமுகம் ஆனார் நயன்தாரா. அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. பல காதல் கிசுகிசுக்களில் சிக்கினாலும், இயக்குநர் விக்னேஷ் சிவனை கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அதன்பிறகு வாடகை தாய் மூலம் இரு குழந்தைகளுக்கு தாயானார் நயன்தாரா. இந்த வாடகை தாய் விவகாரமும் சமூக வலைதளங்களில் தீயாக பரவியது. இருந்தாலும் நயன்தாராவின் ரசிகர்கள் அவருக்கு சப்போர்ட் செய்து தனது கருத்து தங்களது கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.

வித்தியாசமான பெயர்

நயன்தாராவும் விகனேஷ் சிவனும் தங்கள் குழந்தைகளுக்கு என்ன பெயர் வைத்துள்ளார்கள் என்று பல நாட்களாக சஸ்பென்ஸ் இருந்து வந்தது. குழந்தைகளுக்கு உயிர் மற்றும் உலகம் என்று பெயர் வைத்துள்ளதாக கூறி வந்த நிலையில், தற்போது முழு பெயரையும் கூறியுள்ளார் . தனது மகன்களுக்கு “உயிர் ருத்ரோனில்” N சிவன், “உலக் தெய்வேக்” N சிவன் என பெயர் வைத்திருப்பதாக கூறியுள்ளார் நயன்தாரா. இதில் N என்பது நயன்தாராவின் இனிஷியல் மற்றும் அப்பாவின் பெயர் சிவன் என்பதும் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here