எதிர்நீச்சல் தொடரின் அடுத்த பரபரப்பான எபிசோட் அப்டேட்.

விறுவிறுப்பான தொடர்

தொலைக்காட்சிகளில் டாப்பாக இருக்கக்கூடிய சன் டிவியில் ஒளிபரப்பாகும் பல தொடர்கள் ரசிகர்களை கவர்ந்து வருகின்றது. அந்த வகையில் எதிர்நீச்சல் என்ற தொடர் பல ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கி வைத்துள்ளது. தினம் தினம் திருப்பங்களுடன் ஒளிபரப்பாகும் இந்த தொடர், இல்லத்தரசிகளை மட்டும் இல்லாமல் அனைவரையும் கவர்ந்து வருகிறது. இந்த தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் ஜனனி, ரேணுகா, நந்தினி, ஈஸ்வரி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். எதிர்நீச்சல் தொடரில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மதுமிதா கன்னடத்தில் பல சீரியல்களில் நடித்து, தற்போது தமிழில் நடித்து வருகிறார். சின்னத்திரை தொகுப்பாளினி டிடி யின் அக்கா பிரியதர்ஷினி ரேணுகா கதாபாத்திரத்திலும், இந்த தொடரில் ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடிகை கனிகா நடித்துக் கொண்டிருக்கிறார். நடிகை கனிகா திருமணத்திற்கு பிறகு சீரியல்களில் நடிக்க தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பல திருப்பங்கள்

இந்நிலையில் இந்த சீரியலின் லேட்டஸ்ட் எபிசோடில் ஆதிரையை திருமணம் செய்து கொள்வதற்காக எஸ் கே ஆர் குடும்பம் பாட்டியின் 40% ஷேரை கேட்கின்றனர். அரசு கேட்ட ஃ பேக்டரியை சீதனமாக கொடுக்க குணசேகரன் முடிவெடுக்கிறார். ஆனால் கதிர் இதற்கு மறுப்பு தெரிவிக்க, நீ சம்பாதிச்சு வாங்குன கம்பெனி மாதிரி பேசுற என்று குணசேகரன் கேட்கிறார். பேச்சுவார்த்தை முற்றிப்போக உங்கள் உறவே வேண்டாம் என்று கதிர் குணசேகரை கையெடுத்து கும்பிடு போட்டு வெளியே செல்கிறார். குணசேகரன் கண்டிப்பாக கதிரையை அவமானப்படுத்துவார் என்று ரசிகர்கள் காத்திருந்த நிலையில், அந்த சம்பவம் இன்றைய எபிசோடில் நடக்க உள்ளது. விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த தொடரின் எபிசோடுக்கிறாக ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here