சீரியல் நடிகர்கள் தினேஷ் மற்றும் ரட்சிதா விவாகரத்துக்கு தயாராகி உள்ளதாக கூறப்படுகிறது.

பிரபல காதல் ஜோடி

விஜய் டிவியில் பிரபலமான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் தமிழ் சீரியல்களில் நடிக்க துவங்கியவர் ரட்சிதா மகாலட்சுமி. சன் டிவியில் இளவரசி தொடரிலும் நடித்திருந்தார். அதன்பிறகு சரவணன் மீனாட்சி சீசன் 2வில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார். கவினுக்கு ஜோடியாக இவர் நடித்திருந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்தது. அதைத்தொடர்ந்து சரவணன் மீனாட்சி தொடரின் மூன்றாம் சீசனிலும் நடித்திருந்தார். அதன்பிறகு ஜீ தமிழில் நாச்சியார்புரம், விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2 உள்ளிட்ட பல தொடர்களில் ரட்சிதா நடித்துள்ளார்.

முயற்சி பலன் இல்லை

2013 ஆம் ஆண்டு தினேஷ் கோபால்சாமி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவரும் பிரிவம் சந்திப்போம், புதுக்கவிதை, பூவே பூச்சூடவா, நாச்சியார்புரம் உள்ளிட்ட பல தொடர்களில் நடித்திருந்தார். தற்போது ஈரமான ரோஜாவே 2 தொடரில் நடித்து வருகிறார். 2010 ஆம் ஆண்டு இவரது நடிப்பில் மகான் என்ற ஸ்ரீ ராகவேந்திராவின் வாழ்க்கை வரலாற்றில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார். அதன்பிறகு தான் இவருக்கு பல தொடர்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இருவரும் 2013 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்ட பிறகு, கருத்து வேறுபாடு காரணமாக பல மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ஆரம்பகாலத்தில் நட்சத்திர ஜோடியாக இருந்த இவர்கள் ஜோடியாக புகைப்படங்களையும் வெளியிட்டு அசத்தி வந்தனர்.

விவாகரத்து முடிவு

நடிகர் தினேஷ் பலமுறை ரட்சிதாவை கன்வின்ஸ் செய்து, அவருடன் சேர்ந்து வாழலாம் என்று முயற்சி செய்ததாகவும், ஆனால் ரட்சிதா அந்த வாய்ப்பை பயன்படுத்தாமல் உதாசீனப்படுத்தியதாக கூறுகின்றனர். பிக் பாஸ் வீட்டில் ரட்சிதா நடந்து கொள்வதை பார்த்த ரசிகர்கள், வெளியே வந்தவுடன் தன் மனதை மாற்றிக்கொண்டு ஒன்று சேர்ந்து வாழ்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது எதுவும் நடக்கவில்லை. பலமுறை சேர்ந்து வாழ முயற்சி மேற்கொண்டும் ரட்சிதா அதனை ஏற்றுக்கொள்ளாததால் விவாகரத்து செய்யும் முடிவில் தினேஷ் உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதுதொடர்பாக வழக்கறிஞர்களை சந்தித்து பேசி வருவதாக ஷாக்கிங் நியூஸ் வந்துள்ளது. பிக் பாஸ்க்கு பிறகு எந்த வாய்ப்பும் இல்லாமல் இருக்கும் ரட்சிதா, தனது சமூக வலைதளத்தில் அடிக்கடி போட்டோ ஷூட் புகைப்படங்களை மட்டும் வெளியிட்டு வருகிறார். காதலில் துவங்கிய இவர்களது வாழ்க்கை தற்போது விவாகரத்தில் சென்று நிற்கிறது. மேலும் இவர்கள் இருவரும் சேர்ந்து வாழ இவரது நண்பர்கள் அறிவுரை கூறி வருவதாகவும் கூறுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here