ஆகஸ்ட் 16, 1947 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் பேசி கருத்துக்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது.

சுதந்திர போராட்ட வீரர்

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் தயாரிப்பில் கௌதம் கார்த்திக் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் ஆகஸ்ட் 16, 1947. இப்படத்தை என்.எஸ். பொன்குமார் இயக்கியுள்ளார். ரேவதி நாயகியாக அறிமுகம் ஆகியுள்ளார். கடந்த வாரம் இப்படத்தின் டிரெய்லர் வெளியானது. மேலும் படத்தின் பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சுதந்திர போராட்டத்தின் போது ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய வீரர் ஒருவரின் வாழ்க்கையை மையமாக வைத்து ஆகஸ்ட் 16, 1947 திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

பொறுப்பு வரும்

ஏப்ரல் 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் சிவகார்த்திகேயன் பங்கேற்று பேசிய பல விஷயங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஆரம்பத்தில் இப்படத்தை புகழ்ந்து பேசிய சிவகார்த்திகேயன், இப்படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் அவர் பேசுகையில், “கௌதம் கார்த்திக்கை சந்தித்த பிறகுதான் நான் நடிகர் கார்த்திக்கை சந்தித்தேன். நடிகர் கார்த்திக்கின் நடிப்பு எப்போதுமே தனித்துவமாக இருக்கும். பெரிய நடிகரின் மகன் போல் என்று கௌதம் கார்த்திக் நடந்து கொண்டது கிடையாது. எப்போதுமே கேரக்டர் தான் ஒருவரை முடிவு செய்யும். திருமணத்திற்கு பிறகு எல்லோர் வாழ்விலும் மாற்றம் வரும். அது ஒரு பொறுப்பு என்றுகூட சொல்லலாம். ஆர்த்தியை திருமணம் செய்தபிறகு தான் என் வாழ்க்கையில் பல விஷயங்கள் கிடைத்தது. திருமணம் ஒருவர் வாழ்வில் பெரிய மாற்றத்தை கொண்டு வரும்.

தொகுப்பாளர் டு ஹீரோ

எங்கேயும் எப்போதும் படத்தின் விழாவில் நான்தான் தொகுப்பாளர். இங்கு தான் அந்த விழாவும் நடந்தது. வீரம் படத்தில் அஜித் சொன்ன வசனம் தான் எனக்கு நினைவுக்கு வருகிறது. நம்முடன் இருப்பவர்களை நாம் பார்த்துக்கொண்டால், நம்மை மேலே உள்ளவன் பார்த்துக் கொள்வான். நாம் மட்டும் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்க கூடாது. மற்றவர்களும் வெற்றி பெற வேண்டும் என நினைக்க வேண்டும் என்பதை இங்கு உள்ளவர்கள் சொல்லிக் கொடுத்துள்ளனர்” என்று பேசினார். ஒரு முன்னணி நடிகராக ஆன பிறகும் தன்னடக்கத்துடன் இருந்து வரும் சிவகார்த்திகேயனை ரசிகர்கள் புகழ்ந்து பேசி வருகின்றனர். எந்த இடத்திலும் தன் குடும்பத்தையும், தன் மனைவியையும், ரசிகர்களையும், சொந்த வாழ்க்கையும் விட்டுக் கொடுக்காத சிவகார்த்திகேயனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here