நடிகர் அக்ஷய் குமார் “படே மியான் சோட் மியான்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் அக்ஷய் குமாருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

ஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து

ஹிந்தியில் முன்னணி நடிகராக இருக்கக்கூடிய நடிகர் அக்ஷய் குமார், தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான எந்திரன் 2.0 படத்தில் வில்லனாக நடித்தார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான செல்ஃபி திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தற்போது இவரது நடிப்பில் ‘படே மியான் சோட் மியான்’ என்ற படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. இந்த படத்தில் டைகர் ஷெராஃப், பிருத்விராஜ், சோனாக்ஷி சின்ஹா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ஏற்பட்ட காயம்

ஸ்காட்லாண்டில் நடந்து வரும் இப்படத்தின் சூட்டிங்கில் டைகர் ஷெராஃப் மற்றும் அக்ஷய் குமார் இருவரும் மோதும் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது. மிகவும் ஆபத்தான சண்டைக் காட்சிகளில் முன்னணி நடிகர்கள் நடிக்காமல் டூப் போட்டு நடிப்பார்கள் . ஆனால் அக்ஷய் குமார் டூப் போடாமல் தானே நடிக்கிறேன் என்று கூறியதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டு கொண்டிருக்கும் பொழுது அக்ஷய் குமாருக்கு முழங்காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, ஷூட்டிங் சற்று நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் சிறிது நேரம் படப்பிடிப்பு தளத்தில் பதட்டம் நிலவியது. இதுபோல் ஆபத்தான சண்டைக் காட்சிகளில் ஈடுபட வேண்டாம் என்று ரசிகர்கள் அக்ஷய் குமாரை வலியுறுத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here