நடிகை ஆத்மிகா தனது முதல் பட அனுபவத்தை பற்றி பகிர்ந்து கொண்டார்.

கண்ணை நம்பாதே

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகள் லிஸ்டில் நடிகை ஆத்மிகா ஒருவர். இவர் நடிப்பில் வெளியான மீசைய முறுக்கு, நரகாசுரன், கோடியில் ஒருவன், காட்டேரி உள்ளிட்ட திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் உதயநிதியுடன் இணைந்து “கண்ணை நம்பாதே” என்ற படத்தில் நடித்துள்ளார். கிரைம் திரில்லர் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், பிரசன்னா, ஸ்ரீகாந்த், பூமிகா, மாரிமுத்து மற்றும் பலர் நடித்துள்ளனர். கண்ணை நம்பாதே படத்தை இயக்கியுள்ளார் மாறன். இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்திற்கு பிறகு இவர் இயக்கிய படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

துள்ளி குதித்தேன்

இந்நிலையில் தனக்கு கிடைத்த முதல்பட வாய்ப்பு பற்றி மனம் திறந்து பேசியுள்ளார் ஆத்மிகா. ஒரு பேட்டியில் அவர் கூறுகையில், “மீசையை முறுக்கு படம் உண்மையில் என்னால் மறக்கவே முடியாது. ஆதி என்னை அலுவலகத்திற்கு அழைத்ததும் என்னை பாட தான் கூப்பிட்டார்கள் என்று நினைத்தேன். எனக்கு பாடத் தெரியும் என்பது அவருக்கு எப்படி தெரியும் என்பது என்று யோசித்தேன். அதன்பிறகு தான் அவர் ஹீரோவாக நடிப்பது எனக்கு தெரியவந்தது. அந்த சமயத்தில் தான் தனி ஒருவன் படம் ரிலீஸ் ஆகி பாடல்கள் அனைத்தும் சூப்பர்ஹிட் ஆனது. என்னை ஆடிசனுக்கு அனுப்பினார்கள்.

கட்டுக்கோப்பான உடல்

ஆடிஷன் முடிந்த பிறகு மீண்டும் அலுவலகத்திற்கு வந்து ஒரு மாணவி போல காத்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது தான் அங்கு வேலை செய்யும் சமையல்கார பெண் வந்து “ஏமா நீ தான் செலக்ட் ஆயிருக்க.. மேல அதான் பேசிக்கிறாங்க.. நான் சொன்னேன்னு சொல்லிடாதமா” என்று என்னிடம் சொன்னார். அது கேள்விப்பட்டவுடன் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஹீரோயினாக இருக்க வேண்டும் என்றால் உடல் கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும். அதனால் உடல் ஆரோக்கியத்தில் நான் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தேன். பிட்னஸ் செய்து எனது உடலை பிட்டாக வைத்துக்கொண்டேன். உடற்பயிற்சி எனக்கு உடல் ரீதியாக மட்டும் இல்லாமல் மனரீதியாகவும் பெரிய அளவில் பலன் தந்தது” என்று தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்டார் ஆத்மிகா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here