நடிகையும், தனது மனைவியுமான மகாலக்ஷ்மியின் பிறந்த நாளை முன்னிட்டு சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்து அசத்தியுள்ளார் ரவீந்தர்.

மகிழ்ச்சியான ஜோடி

திரைப்பட தயாரிப்பாளரான ரவீந்தர் சந்திரசேகர், சீரியல் நடிகை மகாலக்ஷ்மியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். மகாலக்ஷ்மிக்கு ஏற்கனவே திருமணம் நடந்து ஒரு மகன் இருக்கிறார். முதல் கணவரை பிரிந்த மகாலக்ஷ்மி ரவீந்தரை இரண்டாவதாக மனது கொண்டார். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்ட நாள் முதல் சமூக வலைதளத்தில் பல ட்ரோல்களை சந்தித்து வருகின்றனர். அது மட்டும் இல்லாமல் அதிகம் பேசப்படும் ஜோடியாகவும் மாறி உள்ளனர். யார் என்ன சொன்னாலும் காதில் வாங்கிக் கொள்ளாத இந்த ஜோடி, தங்களது வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். ரவீந்தர் மற்றும் மகாலக்ஷ்மி அடிக்கடி தனது சமூக வலைதளங்களில் தங்களது வாழ்க்கையில் நடக்கும் சின்ன சின்ன விஷயங்களையும் பதிவிட்டு வருவார்கள். ஹனிமனுக்கு சென்றது முதல் கோவிலுக்கு செல்வது வரை அனைத்தையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வரும் இவர்களுக்கு பல வகையான கமெண்ட்டுகளும் குவிந்து வருகிறது. நேற்று பிறந்த நாளை கொண்டாடிய மகாலக்ஷ்மிக்கு சர்ப்ரைஸ் கிஃப்டாக மல்லிகை பூ, கேக் போன்றவற்றை வாங்கி கொடுத்து அசத்தியுள்ளார் ரவீந்தர். இவர் மகாலட்சுமிக்கு கேக் ஊட்டி விடும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதுடன் ஒரு பெரிய காதல் மடலையே எழுதி பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார் ரவீந்தர்.

சர்ப்ரைஸ் கிஃப்ட்

ரவீந்தர் எழுதியுள்ள பிறந்தநாள் வாழ்த்தில்,” பிறந்தநாள்… ஆம். இன்று என் மகாலக்ஷ்மிக்கு பிறந்தநாள். பிரம்மனின் மொத்த கற்பனையாய் எனக்கு விற்பனையானவள் என் மகாலக்ஷ்மி. வாழ்க்கைல அது இஷ்டத்துக்கு ஒன்னு வந்தாதான் அத அதிர்ஷ்டம்னு சொல்லுவாங்க. அந்த அதிர்ஷ்டம்தான் என் மகாலக்ஷ்மி. ஒரு மனிதன் தான் பிறந்ததிலிருந்து எல்லா விஷேச நாட்களையும் கொண்டாடுவான். ஆனா அவன் பிறந்தத ஒரு விசேஷமா கொண்டாடுறது அவன் குடும்பம்தான். ஒரு காலகட்டத்துக்கு அப்புறம் அத கொண்டாடுறது அவனால உருவாக்கப்பட்ட குடும்பம். அப்படி உன்னால உருவாக்கப்பட்ட குடும்பத்தோட ஒரு ஆளாதான் உன் பிறந்தநாள நா கொண்டாடுறேன். நம்ம வாழ்க்கைல நாம நிறைய பேர நேசிப்போம். அவங்க நம்மல நேசிக்கனும்னு அவசியம் இல்ல.அவங்க நம்ம மேல மரியாதையாவும் அன்பாவும் இருப்பாங்க. ஆனா நாம பல பேர நேசிக்க மறந்துருப்போம். அவங்க நம்மல அளவுக்கு அதிகமா நேசிக்குறவங்களா இருப்பாங்க. அப்படி ஒன்னு என் கண்ணுல தென்பட்டப்பதான் உன்ன கல்யாணம் பண்ணிக்கனும்னே தோனுச்சு. மகாலக்ஷ்மி.. காலைல இருந்து ஒரே யோசனை. உன் பிறந்தநாளுக்கு என்ன செய்றதுனு. 12 மணிக்கு கேக் வெட்றது ஸ்வீட் குடுக்குறது முதியோர் இல்லம் அனாதை இல்லம்னு போய் சாப்பாடு போடுறது பிடிச்ச gift வாங்கி குடுக்குறது இப்டி எல்லாமே எப்பையுமே உனக்கு எல்லாரும் பண்றது தான். ஆனா எனக்கு உன்ன பிடிக்கும். அதனால எனக்கு பிடிச்ச ஒன்ன உனக்கு கொடுக்கனும்னு தோனுச்சு. அப்படி ஒரு விஷயம்தான் இந்த ‘மல்லிகை பூ’. நாம நம்ம தேவைக்கு எத வேணாலும் வாங்கிக்க முடியும்ற போது இந்த பூவ உனக்கு குடுக்குறதுக்கு ஒரே காரணம் தான். இந்த பூவிற்கு நிகர் ஏதுமில்ல என் மகாலக்ஷ்மிக்கு நிகரும் யாருமில்ல. என்னப் பொருத்தவர இந்த பூ மிகப்பெரிய ஒரு gift உனக்கு நா இன்னைக்கு குடுக்குறதுக்கு. மத்த பொருள நா வாங்கி குடுக்குறதுல இருக்குற அன்ப விட அன்பே உருவான இந்த பூ வில் அதிகமா இருக்கு. So my humble gift வாங்கிக்கோ. இதுக்கப்புறம் உனக்கு பிடிச்ச எந்த பொருளையும் காசு குடுத்து நீ வாங்கிக்கலாம். ஆனா இந்த பூ என் வாழ்க்கைலயே முதன்முதலா ஒரு பொண்ணுக்கு நா வாங்கி குடுக்குற gift. அது உனக்குதான். I love you mahalakshmi.. Happy birthday” என்று பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here