தன்னை வெறுப்பவர்களுக்கு மிக்க நன்றி என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

அதிக விமர்சனம்

அதிமுக ஆட்சியில் தெர்மாகோல் விவகாரத்தால் அதிகம் விமர்சிக்கப்பட்டவர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு. அதன்பிறகு செல்லூர் ராஜூவை வைத்து ஏகப்பட்ட மீம்ஸ்கள் வரத்தொடங்கின. தற்போது அவரது புகைப்படம் ஒன்று இணையவாசிகளை உற்சாகமடைய வைத்துள்ளது.

வைரல் புகைப்படம்

தாய்லாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள செல்லூர் ராஜு, அங்கு புலிவாலை பிடித்தபடி எடுத்த புகைப்படம்தான் அது. அந்த படத்தையும் பல பேர் மோசமாக விமர்சித்தும், மீம்ஸ் போட்டும் கிண்டலடித்து வந்தனர். பாஜகவில் இருந்து விலகிய திருச்சி சூர்யா செல்லூர் ராஜூவின் டுவீட்டுக்கு டபுள் மீனிங்கில் கிண்டலடித்து கமெண்ட் செய்திருந்தார். அதேபோல் திமுகவினரும் அந்த டுவீட்டுக்கு வரிசைகட்டி வந்து கிண்டலடித்துனர். இதுமட்டுமின்றி ஓபிஎஸ் ஆதரவாளர்களும் செல்லூர் ராஜூவை கிண்டல் செய்திருந்தனர். இந்த விமர்சனம், கிண்டல்களை கண்ட நெட்டிசங்கள், ஒரு சாதாரண புகைப்படத்துக்கு இவ்வளவு வன்மமா என்று செல்லூர் ராஜுவுக்கு ஆதரவாக பேசினர்.

கூல் ரிப்ளை

இந்த விமர்சனங்களையும், கிண்டல்களையும் கவனித்த செல்லூர் ராஜு ஆவேசப்படாமல் மிக கூலாக ஒரு பதிவு போட்டுள்ளார். அது கவனம் பெற்றுள்ளது. செல்லூர் ராஜுவின் டுவீட்டில், ”வணக்கம் trollers and haters. உங்கள் கருத்துக்கு நன்றி. இது உண்மையில் என்னை எந்த வகையிலும் பாதிக்கவில்லை என்றாலும், நீங்கள் இப்போது புத்துணர்ச்சியாக உணர்கிறீர்கள் என்று நம்புகிறேன். இந்த ஈடுபாட்டை உங்களை சுற்றியுள்ள சமூக பிரச்சனைகளில் காட்டிணால் நாடும் வீடும் வளம்பெறும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here