காஷ்மீரில் விறுவிறுப்பாக நடந்து வந்த விஜய் நடிக்கும் லியோ படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரம்மாண்ட லியோ

விக்ரம் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் தற்போது தளபதி விஜய் நடிப்பில் லியோ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தில் திரிஷா, மிஷ்கின், அர்ஜூன், சஞ்சய் தத், மன்சூர் அலி கான், மேத்யூ தாமஸ் கவுதம் மேனன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைத்து வருகிறார். காஷ்மீரில் லியோ படப்பிடிப்பை முடித்து திரும்பிய இயக்குநர் மிஷ்கின், படப்பிடிப்பு மறக்க முடியாத அனுபவமாக இருந்ததாகவும், தனது அனுபவத்தையும் பகிர்ந்து இருந்தார். தற்போது லியோ படத்தின் சூட்டிங்கில் பிஸியாக இருக்கும் லோகேஷ், அடுத்து கைதி 2, விக்ரம் 2 என படங்களை வரிசையில் வைத்துள்ளார்.

ஷூட்டிங் நிறைவு

இந்நிலையில், லியோ படத்தின் அப்டேட்டுகள் அடிக்கடி வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் நடிகர் விஜய், நடிகர் சஞ்சய் தத், லோகேஷ் கனகராஜ் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியாது. அதன்பிறகு நடிகர் சஞ்சய் தத்துடன் விஜய் பேசுக்கொண்டிருக்கும் புகைப்படமும், அதன் வீடியோவும் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. தற்போது படத்தின் புது அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது லியோ படத்தின் காஷ்மீர் படப்பிடிப்பு இந்த வார இறுதியில் முடிவடையும் என்றும், இரண்டு வார இடைவேளைக்கு பிறகு அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here