உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிப்பட்டிருந்த காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் அனுமதி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஈவிகேஎஸ் இளங்கோவன், மக்கள் நலப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கடந்த வாரம் புதன்கிழமை திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இளங்கோவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக தெரிவித்தனர்.

கொரோனா

இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான கொரோனா தொற்றுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல்நிலை தேறி வருவதாகவும் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here