RRR படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார் இயக்குநர் ராஜமௌலி.

பிரம்மாண்ட வெற்றி

தெலுங்கில் பிரம்மாண்ட இயக்குநர் என்று அனைவராலும் அழைக்கப்படும் ராஜமௌலி இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகி ஆஸ்கர் விருது, கோல்டன் குலோப் விருது பல விருதுகளை அள்ளிக் குவித்தது RRR திரைப்படம். இந்த படத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவகன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். சுமார் ரூ.550 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம், ரூ. 1250 கோடிகளுக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. தெலுங்கு, தமிழ், ஹிந்தி என பல மொழிகளில் உருவான இந்த திரைப்படம், ஒட்டுமொத்த இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைக்கும் அளவிற்கு வெற்றியை பெற்றது.

கண்டிப்பா இருக்கு

‘RRR’ படத்தின் வெற்றியை தொடர்ந்து அப்படத்தின் அடுத்த பாகம் உருவாகுமா என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த நிலையில், அதற்கான அப்டேட்டையும் வெளியிட்டு அனைவரையும் குஷியில் ஆழ்த்தியுள்ளார் பிரம்மாண்ட இயக்குநர் ராஜமௌலி. இதுகுறித்து அவர் கொடுத்துள்ள பேட்டியில், “RRR படத்தின் இரண்டாம் பாகம் நிச்சயம் உருவாகும், உடனடியாக படத்தின் பணிகளை விரைவுப்படுத்த முடிவெடுத்துள்ளேன். கீரவாணி சொன்ன ஒன்லைன் என்னை கவர்ந்துள்ளது. அதனால் இந்த கதையை முழுமையாக எழுதி முடித்துவிட்டு அடுத்தகட்ட பணிகளை தொடங்குவேன்” என்று கூறியுள்ளார். இதில் நடிக்கக்கூடிய நடிகர்கள் குறித்த அடுத்தகட்ட அப்டேட்டும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here