சீதா ராமம் படத்தின் மூலம் பிரபலமான நடிகை மிருணாள் தாகூர் தனது சம்பளத்தை கோடிக்கணக்கில் உயர்த்தியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

ஹோம்லி சீதா மஹாலக்ஷ்மி

2012 ஆம் ஆண்டு ஹிந்தி சீரியலில் நடிக்க துவங்கியவர் நடிகை மிருணாள் தாகூர். ‘கும்கும் பாக்யா’ என்ற தொடர் மூலம் மிகவும் பிரபலமானார். ஹிந்தியில் சில படங்களில் நடித்திருந்தாலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றி கிடைக்காத நிலையில், கடந்த ஆண்டு வெளியான ‘சீதா ராமம்’ திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்தார். சீதா மகாலட்சுமி மற்றும் பிரின்சஸ் நூர்ஜஹான் என்ற கதாபாத்திரத்தில் நடித்து முன்னணி நடிகைகளின் லிஸ்டில் சேர்ந்து கொண்டார் மிருணாள் தாகூர்.

கவர்ச்சி ஆட்டம்

சீதா ராமம் படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்து மிகப்பெரிய வெற்றியை பெற்றார் மிருணாள் தாகூர். இவரின் புகழ் இந்த படத்திற்குப் பிறகு உச்சிக்கு சென்றது. தற்போது பல படங்களில் கமிட் ஆகி வரும் இவர், சமீபத்தில் அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான செல்ஃபி திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு படு கவர்ச்சியாக நடனமாடி ரசிகர்கள் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். குடும்பப் பெண்ணாக சீதா மஹாலக்ஷ்மி என்ற பெயரில் இவர் நடித்த சீதா ராமம் திரைப்படம் ஒரு பக்கம் ஹிட் கொடுக்க, படு கவர்ச்சியாக இன்னொரு பக்கம் இவர் ஆடிய நடனமும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.

இத்தனை கோடியா?

தற்போது நானி படத்தில் நடித்து வரும் மிருணாள் தாகூர், சூர்யா 42 படத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறுகின்றனர். அது மட்டும் இல்லாமல் அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்பும் இவரை தேடி வருகின்றது. கதை தேர்வில் மிக கவனமாக இருக்கிறார் மிருணாள் தாகூர். இவரது நடிப்பில் ஐந்து படங்களுக்கு மேல் வெளியாக தயாராக உள்ளது. தொடர் வெற்றியின் காரணமாக தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளார் மிருணாள் தாகூர். தற்போது தனது சம்பளத்தை ரூ.6 கோடி வரை உயர்த்தி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. நயன்தாராவுக்கு அடுத்து அதிக சம்பளம் பெறும் நடிகையாக இவர் உயர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் வெளிவந்தது முதல் டாப் நடிகைகள் ஷாக்கில் உள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் நிலவி வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here